மேலும் அறிய

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் “வந்தே பாரத்” ரயில் பல நாடுகளில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் என விமானங்களுக்கு இணையான நவீன சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வந்தே பாரத் ரயில்:

இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரயில்  சேவைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்துக்குள் முதலாவது வந்தே பாரத் ரயில் , சென்னை - கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்  சேவை தொடங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில்  சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

சென்னை - நெல்லை:

சென்னை- நெல்லை இடையே இதை ஏற்று சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரெயிலில் முதல்கட்டமாக 552 பயணிகள் பயணம் செய்யும் வகையில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில்  சேவை தொடங்கப்பட உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது என்பதால் 8 பெட்டிகளிலும் இருக்கைகள், உட்கார்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்  சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில்  நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும், விழுப்புரம் ரயில்  நிலையத்தில் நின்று செல்லாது என தகவல் வெளியானது. இது விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் மற்றும் இங்கு வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.


Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களிலும் மற்றும் உறவினர் வீட்டு, சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரும்பாலும் விழுப்புரத்தில் இருந்து ரயில்  பயணமாகவே சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரயில்  நிலையம் திகழ்ந்து வருவதாலும், இந்த ரயில்  நிலையம் “ஏ தரச்சான்று” பெற்ற ரயில்  நிலையமாகவும், ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் ரயில்  நிலையங்களில் ஒன்றாகவும் இருந்து வருவதால் விழுப்புரம் ரயில்  நிலையத்தில் வந்தே பாரத் ரயில்  நின்று செல்ல நிறுத்தப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசுக்கும், ரயில்வே துறைக்கும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

விழுப்புரத்தில் நிற்கும்

விழுப்புரத்தில் நின்று செல்லும் இந்நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்  சேவை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கப்படும் என்றும், இந்த ரயில்  விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்றுசெல்லும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக விழுப்புரத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தடைகிறது.


Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

பின்னர் 12.02 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில்  மதியம் 1.50 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில்  விழுப்புரம் ரயில்  நிலையத்தை மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.37 மணிக்கு புறப்படும் ரயில்  இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. மேலும் மணிக்கு 83.30 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலானது, சென்னை- திருநெல்வேலி இடையேயான 652.49 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் இன்று இரண்டாம் கட்டமாக  நெல்லையில் இருந்து சென்னைக்கு  சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Embed widget