மேலும் அறிய

Vandalur Zoo COVID Alert | சிங்கத்துக்கு அடுத்து புலி.? வண்டலூர் பூங்காவில் தற்போதைய நிலவரம் என்ன?

வண்டலூர் புலிகளிலும் கொரோனா இருக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்

கொரோனா முதல் அலை காலக்கட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மற்றும் இந்தியாவில் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் நாய் பூனைகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் புகார்கள் வரத்தொடங்கின. விலங்குகளில் கோவிட்-19 கொரோனா தாக்கம் குறித்து எழுந்த முதற்கட்டப் புகார்கள் இவை. இருந்தாலும் பின்னர் விலங்குகளில் கொரோனா பரவாது என உறுதியாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே 2021ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மெல்லத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை கிடுகிடுவென மக்களிடையே பரவியது.  கொரோனா வைரஸின் இந்திய இனவகை மற்றும் பிரிட்டன், தென் ஆப்ரிக்க இனவகை என கொரோனா கலவையாக இந்திய மக்களைத் தாக்கியது.


Vandalur Zoo COVID Alert | சிங்கத்துக்கு அடுத்து புலி.? வண்டலூர் பூங்காவில் தற்போதைய நிலவரம் என்ன?

தற்போது தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தொடர் ஊரடங்கின் அடிப்படையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாக மேலும் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்ட சிங்கத்தில் ஒன்று இறந்ததாகவும் தகவல் கிடைத்தது.  கொரோனா முதல் அலை காலம் தொடங்கியே பூங்காவிற்கான பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள விலங்குகளின் உடல்நிலையும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க சிங்கங்களுக்கு எப்படிக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது? வைரஸ் எப்படித் தொற்றியது எனக் கேள்வி எழுந்தது.


Vandalur Zoo COVID Alert | சிங்கத்துக்கு அடுத்து புலி.? வண்டலூர் பூங்காவில் தற்போதைய நிலவரம் என்ன?

வண்டலூர் பூங்காவின் துணை இயக்குநர் நாகசதீஷ் கிடிஜலா ஐ.எஃப்.எஸ். இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்தார். அவர் கூறியதிலிருந்து,’சிங்கங்களுக்கு இரண்டு வழியாக மட்டுமே கொரோனா பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று, பூங்காவைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்பவர்களிடமிருந்து தொற்றியிருக்க வேண்டும். இரண்டு, விலங்குகளுக்குத் தரப்படும் மாட்டுக்கறியிலிருந்து பரவியிருக்க வேண்டும். ஆனால் பூங்காவைச் சுத்தம் செய்பவர்களுக்குத் தொடக்கத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிட்டது, தொடர்ச்சியாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெரம்பூரின் இறைச்சியகங்களில் இருந்துதான் ஒட்டுமொத்தமாக வண்டலூர் விலங்குகளுக்கு உணவு எடுத்து வரப்படுகிறது. பல கைகள் மாறி வருகிறது என்பதால் கறிகள் எப்போதுமே புறஊதாக்கதிர்கள் கொண்டு சுத்தம்செய்யப்பட்டுதான் விலங்களுக்குத் தரப்படும். மேலும் இறைச்சி வெட்டுபவர்கள் உட்பட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.இந்த இரண்டு வழிகளைத்தவிர சிங்கங்களுக்கு வேறு எப்படியும் கொரோனா பரவ வாய்ப்பில்லை.நாங்கள் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.சிங்கங்கள் சரியாக உணவு உட்கொள்வதில்லை என்கிற புகார் வந்தவுடன் முன்னெச்சரிக்கையாக 15 சிங்கங்களின் சாம்பிள்களை கடந்த மே 26ந் தேதி  பரிசோதனை செய்தோம். அறிகுறிகள் தென்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.அவை நல்லமுறையில் உடல்நிலை தேறிவருகின்றன. இறந்த சிங்கம் அது சாகும் தருவாய் வரை எவ்வித கொரோனா அறிகுறியும் காண்பிக்கவில்லை. தற்போது மேலும் 7 சாம்பிள்கள் ஹைதராபாத் சிசிஎம்பி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 4 புலிகளின் சாம்பிள்களும் அடக்கம். இன்று சிறுத்தையின் சாம்பிள்களையும் பரிசோதனைக்காக  எடுக்கவுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.


Vandalur Zoo COVID Alert | சிங்கத்துக்கு அடுத்து புலி.? வண்டலூர் பூங்காவில் தற்போதைய நிலவரம் என்ன?

வண்டலூர் புலிகளிலும் கொரோனா பாதிப்புக்கு வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டதற்கு, ‘நிச்சயம் வாய்ப்பிருக்கிறது!’ என்றார். இதுநாள்வரை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் மட்டுமே கொரோனா பரவி வந்த நிலையில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:விலங்கு கொரோனா: மனிதனுக்கு பரவினால் என்ன ஆகும்? உலக ஆய்வுகள் சொல்வதென்ன!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
Volvo EX30: ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Embed widget