Tamil actor Vivek Death : அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! சிரிக்கவைத்த கலைஞன் அழ வைத்துவிட்டான் - வைரமுத்து இரங்கல்..
சிரிக்க வைத்த கலைஞன் அழ வைத்துவிட்டான் என்று நடிகர் விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!<br>எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்<br>அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!<br><br>திரையில் இனி பகுத்தறிவுக்குப்<br>பஞ்சம் வந்துவிடுமே!<br><br>மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!<br>நீ நட்ட மரங்களும் உனக்காக<br>துக்கம் அனுசரிக்கின்றன.<br><br>கலைச் சரித்திரம் சொல்லும் :<br>நீ ‘காமெடி’க் கதாநாயகன்.</p>— வைரமுத்து (@Vairamuthu) <a href="https://twitter.com/Vairamuthu/status/1383245998907006978?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழ வைத்துவிட்டுப் போய்விட்டானே!. திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே!. மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச்சரித்திரம் சொல்லும்: நீ ‘காமெடி’க் கதாநாயகன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets