மேலும் அறிய

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதினருக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிவழங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், அதனைக்  கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்கள். அதில்  சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களை பணிசெய்ய அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால், கிராமப்புற ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றார்கள். பெரும்பாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலைவாய்ப்பை நம்பியே உள்ளதாக மதிமுக பொதுச்செயளாலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற முடியாது என்ற அறிவிப்பால், கணவன் மற்றும் குழந்தைகளை இழந்து வாழும் பெண்களும், வயதானவர்களும் வேலையில்லாமல் உணவுக்குக் கூட  வழியின்றி தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள வைகோ, கொரோனாவால் ஏற்படும் மரணங்களை விட, உணவுக்கு வழியின்றி பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் பெரும்பாலான கிராம மக்களின் வீட்டில் அடுப்பு எரிகின்றது. 

தற்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. ஆகவே, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும்  அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Loksabha Elections 2024: 19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம் உள்ளே
19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம் உள்ளே
PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” - நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி
PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” - நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி
ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன?  ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
ஆஹா என்ன வரிகள் 2:
ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

G Ramakrishnan Wishes ABP  : 4-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ABP நாடு-  ஜி ராமகிருஷ்ணன் வாழ்த்துKani K. Navas : அவதூறு பரப்பிய எதிர்க்கட்சியினர் ஆதரவாக நின்ற ஊர்மக்கள் மாஸ் காட்டும் நவாஸ் கனிThangar Bachan  : கணவருக்காக களம் இறங்கிய தங்கர் பச்சான் மனைவி சூடு பிடித்த பிரச்சாரம்Nainar Nagendran  : 4 கோடி பிடிபட்ட விவகாரம் போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Loksabha Elections 2024: 19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம் உள்ளே
19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம் உள்ளே
PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” - நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி
PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” - நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி
ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன?  ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
ஆஹா என்ன வரிகள் 2:
ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!
Rathnam Trailer: ஹரி படத்தில் மீண்டும் அரிவாள் தூக்கிய விஷால்.. ரத்னம் திரைப்படத்தின் டிரெய்லர் இதோ!
Rathnam Trailer: ஹரி படத்தில் மீண்டும் அரிவாள் தூக்கிய விஷால்.. ரத்னம் திரைப்படத்தின் டிரெய்லர் இதோ!
அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி..! திமுக வீட்டு மக்களுக்கான கட்சி..! - இபிஎஸ் குற்றச்சாட்டு 
அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி..! திமுக வீட்டு மக்களுக்கான கட்சி..! - இபிஎஸ் குற்றச்சாட்டு 
Hardik Pandya: தோனியை புகழ்ந்து ரோகித், பும்ராவை கண்டு கொள்ளாத பாண்ட்யா! கோபத்தில் மும்பை ரசிகர்கள்
Hardik Pandya: தோனியை புகழ்ந்து ரோகித், பும்ராவை கண்டு கொள்ளாத பாண்ட்யா! கோபத்தில் மும்பை ரசிகர்கள்
Breaking Tamil LIVE: எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது - பிரதமர் மோடி
Breaking Tamil LIVE: எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது - பிரதமர் மோடி
Embed widget