மேலும் அறிய

Uniform Civil Code: ”ஒரேமாதிரியான சட்டம் எதற்கு? ஒரே மாதிரியான உரிமைக்கான சூழ்நிலை வேண்டும்” - கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும்
ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  ரிதுராஜ் அவஸ்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில சீர்திருத்தங்களின் அவசியத்தை தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது.  பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை  தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களையும் முதலமைச்சர்  பட்டியலிட்டுள்ளார்.

அதில், 

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்

மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, “ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.  அதன்படி அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம், கூட்டாட்சி அமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு, வரலாற்றுப் பின்னணி, சிறுபான்மையினர் உரிமைகள், சமூகப் பொருளாதார தாக்கங்கள், இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை ஆகிய தலைப்புகளின் கீழ் எதிர்ப்புக்கான காரணங்களை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது
முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம். சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை
நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
Amit Shah: நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா ”அடம்பிடித்து பேரை சேர்த்த பிரதமர் மோடி” - அமித் ஷா விளக்கம்
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை; ’அப்பா’ ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக கேள்வி!
அதிர்ச்சி! அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை; ’அப்பா’ ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக கேள்வி!
முத்தையா மகன் நடிக்கும் சுள்ளான் சேது.. மாணவன் கையில் அரிவாள்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
முத்தையா மகன் நடிக்கும் சுள்ளான் சேது.. மாணவன் கையில் அரிவாள்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
ஈபிஎஸ் உடன் தங்கமணி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்
ஈபிஎஸ் உடன் தங்கமணி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்
Metro Fare Hikes: டிக்கெட் விலையை உயர்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம் - டெல்லி மக்கள் அதிர்ச்சி
Metro Fare Hikes: டிக்கெட் விலையை உயர்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம் - டெல்லி மக்கள் அதிர்ச்சி
Embed widget