மேலும் அறிய

Tsunami 19th Anniversary: ஆண்டுகள் பல கடந்தும் கரையாத சோகம் -  கடலூர் கடற்கரையில் கண்ணீர் வடித்த மீனவ பெண்கள்

சுனாமி தினம் அனுசரிப்பை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கடற்கரையில் மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி பேரலை தாக்கியது.
 
தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்களும் பெரிதும் சேதத்தை சந்தித்தன. இப்பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர்  40 பேர் மாயமாகினர். கடலோர கிராமங்கள் அழிந்தன.
 
19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கடலூர் சிங்காரத்தோப்பு பாலத்தில்  இருந்து சோனங்குப்பம் கடற்கரை வரை ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி இறந்தவர்கள் நினைவாக மெழுகுவர்த்தி எந்தி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Tsunami 19th Anniversary: ஆண்டுகள் பல கடந்தும் கரையாத சோகம் -  கடலூர் கடற்கரையில் கண்ணீர் வடித்த மீனவ பெண்கள்
 
அதேபோல்  கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
தொடர்ந்து கால் பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
 
அதிமுக வடக்கு மாவட்ட கழகம் மீனவர் அணி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

Tsunami 19th Anniversary: ஆண்டுகள் பல கடந்தும் கரையாத சோகம் -  கடலூர் கடற்கரையில் கண்ணீர் வடித்த மீனவ பெண்கள்
 
அதேபோல் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும் கடலில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு குடியிருப்புகள் கட்டிக் கொடுத்த நிலையில் அந்த இடங்களுக்கான பட்டா 19 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை, அதனை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பெரும் துயர சம்பவத்தை நினைவு கூறும் விதமாக மீனவர்கள் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
சுனாமி தினம் அனுசரிப்பை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Musk

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
Embed widget