மேலும் அறிய

5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள் - அமைச்சர் விளக்கம்!

அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. அப்படியே ஆட்டோவில் சென்றாலும் அதிக அளவு பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைத்தனர். 

இதையடுத்து, அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படியான சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போதுமான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இல்லை என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிகழ்வும் நடைபெற்று வருகிறது. 

போதிய பேருந்து வசதிகள் இல்லை:

இந்தநிலையில், நேற்றும் (பிப்ரவரி 11) நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால்  வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் கிடைக்காமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பயணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டனர். 

அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் பயணிகளிடம் உரிய பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றது என்று சமாதானம் செய்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பியது.

இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் விளக்கம அளிக்கப்பட்டுள்ளது. அவை, ”10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு  போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதிகாலை 3.30  மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.” என தெரிவித்தனர். 

அமைச்சர் விளக்கம்:

இந்தநிலையில், கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அதில், “அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும். வதந்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Embed widget