மேலும் அறிய

Tomato Price: ரூ.120ஐ கடந்த தக்காளி; ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறி வாங்கவே செலவிடும் நிலை- அன்புமணி

தக்காளி விலை ரூ.120ஐ கடந்த நிலையில், ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்கவே செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக் தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை ரூ.120ஐ கடந்த நிலையில், ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்கவே செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக் தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80- 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.

பல ஏழைக் குடும்பங்களில் ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்குவதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது.  வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தவிர்த்து விட்டு சமையல் செய்வது என்பதும் சாத்தியமில்லை. அதனால், ஏழை & நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 - ரூ.68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணைப் பசுமைக் கடைகள் சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப் போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாலும் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; பொதுமக்களின் தேவைகளையும் போக்கவில்லை.

அரிசி, பருப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாத உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களாக உயர்ந்திருக்கின்றன. அரிசி விலை கிலோ ரூ.15 வரையிலும், துவரம் பருப்பு விலை கிலோ ரூ.45 வரையிலும், பிற பருப்பு மற்றும் மளிகை சாமான்களின் விலைகள் சராசரியாக 10% முதல் 20% வரையிலும் உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் தக்காளி உள்ளிட்ட  காய்கறிகளின் விலைகளும் உயர்ந்தால் அதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அரிசி, பருப்பு மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தமிழ்நாடு அரசு மொத்தமாக கொள்முதல்  செய்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளிலும், நியாயவிலைக் கடைகளிலும்  மலிவு விலையில் விற்க வேண்டும். தேவைப்பட்டால் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள் மூலமாக  நடமாடும் காய்கறி கடைகளை அமைத்து அவற்றின் வழியாகவும், வெங்காயம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். அதன் மூலம் வெளிச் சந்தையிலும் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். அதனால் மக்கள் நிம்மதியடைவார்கள்.

தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் விளையும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் பல்லாயிரம் டன் தக்காளியை  உழவர்கள் குப்பையிலும், சாலைகளிலும் கொட்டினார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள் தக்காளியை பறிக்காமல் செடிகளுடன் சேர்த்து உழுது அழித்தனர். அப்போது ரூ.1க்கு தக்காளியை வாங்க ஆள் இல்லை.... ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது.

அரசு ஆராய வேண்டும்

தக்காளி, சாம்பார் வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்பதை அரசு ஆராய வேண்டும். திடீர் மழையால் தக்காளி பயிர்கள் சேதமடைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதை விட முதன்மையான காரணம் கடந்த காலங்களில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பயிரிட்டு,  விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் இழப்பை சந்தித்த உழவர்கள், இனியும் அத்தகைய இழப்பை தாங்க முடியாது என்ற எண்ணத்தில் வெங்காயம், தக்காளி பயிரிட தயங்கி வேறு பயிர்களுக்கு மாறியதும் ஒரு காரணம் என்பதை அரசு உணர வேண்டும். தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிச் செடிகளை நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்

இந்த நிலையை மாற்றி, ஆண்டின் எல்லா காலங்களிலும் சந்தைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும்,  உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக  வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அவற்றின் மூலம் வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mk stalin on Delimitation : தென்னிந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் பாஜக.! தொகுதி மறுவரையை அவசரமாக கொண்டுவர தேவை என்ன.? விளாசும் ஸ்டாலின்
தென்னிந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் பாஜக.! தொகுதி மறுவரையை அவசரமாக கொண்டுவர தேவை என்ன.? விளாசும் ஸ்டாலின்
Tamilnadu Roundup: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Tamilnadu Roundup: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
Embed widget