மேலும் அறிய

ராமநாதபுரம் மணிகண்டன் மரணம்: முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு காவல் ஆய்வாளரின் அறிக்கை

ராமநாதபுரம் இளைஞர் மணிகண்டன் மரண விவகாரத்தில், முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அடுத்த நீர்கோழியேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்பவரின் மரணத்தை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. டிசம்பர் 4, 2021 மாலை  மணிகண்டன் மற்றும் சஞ்சய் காவலர்களை பார்த்ததும் நிற்காமல் சென்றாதலும், தப்பித்து சென்ற சஞ்சய் பெயரில் கொலை முயற்சி வழக்கு இருந்ததாலும், விளக்கம் கேட்க காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். 

அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதால், அவருக்கு தக்க அறிவுரை கூறி அவருடைய பெற்றோரை வர வைத்து மறுநாள் காலை விசாரணைக்கு ஆஜராகும்படி, ஆஜர் மூச்சலிக்கா எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர். இது காவல் துறையில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்முறை. விசாரணை குறித்தான  முழுமையான CCTV காட்சிகள் மற்றும் அவரது உரையாடல்கள் எல்லாம் தெளிவாக உள்ளன.


ராமநாதபுரம் மணிகண்டன் மரணம்: முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு காவல் ஆய்வாளரின் அறிக்கை

சென்னையில் TN 05 CD 2641 என்கிற NS 200 இரு சக்கர வாகனத்தை இவருடைய உறவினர் ஹரிஹரன் என்பவர் வைத்திருந்துள்ளார். இந்த வண்டியின் எண்ணை மணிகண்டன் தன்னுடைய வண்டியில் போட்டு பயன்படுத்துகிறார். முதலில் சிவப்பு நிறத்தில் இருந்த அந்த வண்டியை வெள்ளை நிறமாக மாற்றி போலியான எண்ணில் ஓட்டி வருகிறார். இது அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

மணிகண்டன் ஓட்டி வந்த இரு சக்கரவாகனத்தின் இன்ஜின் நம்பரை தணிக்கை செய்ததில் மதுரை மாவட்டம் மேலூரில் 20.08.2021 அன்று திருடப்பட்டதாக வண்டி உரிமையாளர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. மணிகண்டனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து வர சொல்லும்போது, அவரது தாயார் தன்னிடம் வாகனம் எதுவும் இல்லை என்று கூறியதால், ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு காவலர் கூறியதை, அடித்ததால் தான் ஆட்டோ பிடித்து வருமாறு கூறியதாக தவறான செய்தி பரப்புகின்றனர்.


ராமநாதபுரம் மணிகண்டன் மரணம்: முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு காவல் ஆய்வாளரின் அறிக்கை

அவர் காவல் நிலையத்தில் இயல்பாக நடப்பதையும், பேசுவதையும் நாம் CCTV பதிவுகளில் காணலாம். அவரை துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் எதுவும்  இல்லை. அவரது உடற்கூறாய்விற்கு பிறகு எடுத்த படங்களை போட்டு தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் அவரது உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிய நபர்கள் முழுமையாக சோதனை செய்துள்ளனர்.  மருத்துவர் குழுவும் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இது குறித்த முழுமையான CCTV பதிவுகள், போலி வாகன ஆவணங்கள், வாகன உரிமையாளரின் வாக்குமூலங்கள் ஆகியவை அனைத்து தரப்பு முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வீடியோ ஆதாரம்  காண்பிக்கப்பட்டது. எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, அனைத்து செயல்பாடுகளிலும் காவல்துறை வெளிப்படை தன்மையை உறுதி செய்து வருகிறது.   

தங்களின் குடும்பத்தை கூட கவனிக்காமல், இரவு பகல் பாராது உண்மையாக உழைத்து வரும் காவல் துறையின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வண்ணம் சிலர் செயல்பட்டு இந்த விஷயத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஒரு சில யூகங்களின்  அடிப்படையில் பேசுவது சரியன்று. இந்த மரணத்தை குறித்து முழுமையான நீதி விசாரணை நடந்து வருவதை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget