மேலும் அறிய

ABP Nadu Impact: 4 ஆண்டுகளாக விடியலுக்கு காத்திருந்த கால்பந்து அணி.. அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலின்

ABP நாடு செய்தியைத் தொடர்ந்து 2018ல் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு தமிழக அரசு பரித்தொகையை ரூபாய் 25 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் தேசிய அளவிலான சீனியர் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தியாவில் மகளிர் கால்பந்தில் கோலோச்சி, 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் மகளிர் அணியை தமிழ்நாடு மகளிர் அணியினர் இறுதிப்போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். ஆனால், மிகப்பெரும் சாதனையைப் படைத்த தமிழ்நாடு மகளிர் அணிக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தது. இது தொடர்பாக அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில், ஐ.எஸ்.எல். லீக் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் அணிக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனமும் மகளிர் கால்பந்து அணியினரின் நியாயமான கோரிக்கையை செய்தியாக வெளியிட்டது. இது குறித்து உடனடியாக பதிலளித்த மன்னார்குடி  எம்.எல்.ஏ. TRB ராஜா, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பதிலில், “ வணக்கம் மனோஜ். எஸ்.டி.ஏ.டி. மகளிர் மூத்த தேசியக்குழுவின் திறமையை கண்டறிந்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட குழு தற்போது நாமக்கல்லில் பயிற்சி முகாமில் உள்ளது. 2018ல் மூத்த தேசிய வெற்றியாளர் கோப்பையை எங்கள் மகளிர் அணி கைப்பற்றியது. அந்தநேரத்தில் முறையாக அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால், தற்போதைய அரசு  இந்த அணியை திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் மகிமையுடனும் மிளிரச்செய்யும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ABP Nadu Impact: 4 ஆண்டுகளாக விடியலுக்கு காத்திருந்த கால்பந்து அணி.. அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலின்

மேலும், அவர் மகளிர் கால்பந்து அணியினருக்கான ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார். அணியில் உள்ள வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1.38 லட்சம் வீதம் மொத்தமாக ரூபாய் 25 லட்சம் தமிழ்நாடு அணிக்கு ஊக்கத்தொகையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் குரூப் சி பதவிகளில் பணிகள் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கும். அரசுப்பணி வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு சிறப்பு நிகழ்வாக எடுத்துச்செல்லப்பட்டு, உதவிபுரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget