மேலும் அறிய

Kayalpattinam Rain: காயல்பட்டினத்தில் 93 செ.மீ. மழை! 1992க்கு பிறகு பேய்மழை - மக்கள் கடும் அவதி

திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. நேற்று  (டிசம்பர் 17) அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் சூழலை கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்து நீர் சூழ்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து மீட்பு படையினர், தூய்மை பணியாளர்கள் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர். 

காயல்பட்டினத்தில் பேய் மழை:

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 668 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு காயல்பட்டினத்தில் மட்டும் 93 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்படி, அந்த பகுதியில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும், அதிகமான மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். 1992 இல் காக்காச்சி (மாஞ்சோலை)-யில் மதிவான பதிவான 965 மில்லி மீட்டர் மழைக்கு அடுத்த இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, இன்று பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பயணம் மேற்கொண்ட மக்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். தாழ்வான பகுதியில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  • நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 663 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 செ.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு இடங்களிலும் 35 செ.மீ., மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ., சேரன்மகாதேவியில் 40 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget