மேலும் அறிய

Right To Health | சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்குங்கள்: மக்களவைக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம்..!

எந்த நாட்டில் சுகாதாரமும், கல்வியும் மக்களுக்கு இலவசமாக தரமாகக் கிடைக்கிறதோ அந்த நாடு வளர்ந்த நாடு என்று அறியப்படுகிறது.

எந்த நாட்டில் சுகாதாரமும், கல்வியும் மக்களுக்கு இலவசமாக தரமாகக் கிடைக்கிறதோ அந்த நாடு வளர்ந்த நாடு என்று அறியப்படுகிறது.

அந்தவகையில் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். உலகமே கொரோனா பெருந்தொற்றால் சிக்கித் தவிக்கிறது. இந்தியா இரண்டாம் அலையில் சிக்கி தற்போதுதான் மீண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இந்த முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவைக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். சுகாதார உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிட்ட வேண்டும். சட்டப்பிரிவு ஒன்று  அளிக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதில் சட்டப்பிரிவு 21 பியை உட்புகுத்தி அவசர மருத்துவ சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் கூட சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துள்ளன. 2017ல் ராஜ்யசபா எம்.பி விஜயசாய் ரெட்டி இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். அப்போது மக்களவையில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய விஜயசாய், சுகாதாரத்துக்கு அரசு செலவினம் 1.4% என்றளவிலேயே உள்ளது. பொது சுகாதாரத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வாதிகள் போதுமானதாக இல்லை என்றும் சரிசமமாக இல்லை என்றும் தெரிவித்தார்.

2018ல் ராஜ்யசபா எம்.பி. ரூபின் போராவும் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்கக் கூறி கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் இந்திய அரசியலமைப்பு சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 10% ஆவது பொது சுகாதாரத்தைப் பேண ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக மனு சிங்வி ராஜ்யசபாவில் இலவச மருத்துவ சேவை மசோதாவை Right to Universal and Free Health Care Bill அறிமுகப்படுத்தினார். அவரும், அனைவருக்கும் இலவச சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் 2002ஆம் ஆண்டு ஏ.பி. வாஜ்பாய் தலைமையில்தான் கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது. அதுபோல அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்குவதற்கு இதுவே தகுந்த தருணம் ஆகும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21-ல் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்குவதற்கு மசோதா ஒன்றை தாங்கள் கொண்டு வரவேண்டும் என்று எம்.பி. ரவிக்குமார் ஏற்கெனவே கடிதம் மூலம் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
Breaking News LIVE, 20 Sep : தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர்; அவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்: வைரமுத்து
Breaking News LIVE, 20 Sep : தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர்; அவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்: வைரமுத்து
Vettaiyan Hunter vantar: குறி வச்சா இரை விழணும் - வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல்! 
Vettaiyan Hunter vantar: குறி வச்சா இரை விழணும் - வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல்! 
CAT 2024 Registration: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்கணுமா? கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
CAT 2024 Registration: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்கணுமா? கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
Breaking News LIVE, 20 Sep : தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர்; அவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்: வைரமுத்து
Breaking News LIVE, 20 Sep : தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர்; அவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்: வைரமுத்து
Vettaiyan Hunter vantar: குறி வச்சா இரை விழணும் - வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல்! 
Vettaiyan Hunter vantar: குறி வச்சா இரை விழணும் - வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல்! 
CAT 2024 Registration: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்கணுமா? கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
CAT 2024 Registration: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்கணுமா? கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay Manadu: விட்றா வண்டிய..! தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதியை அறிவித்தார் விஜய்..! எங்கு, எப்போது?
TVK Vijay Manadu: விட்றா வண்டிய..! தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதியை அறிவித்தார் விஜய்..! எங்கு, எப்போது?
Madurai Hc: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பிற்கு நீதிபதிகள் எச்சரிக்கை! என்ன விஷயம்?
Madurai Hc: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பிற்கு நீதிபதிகள் எச்சரிக்கை! என்ன விஷயம்?
Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? வெள்ளை ஆதாரிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விவரங்கள் இதோ..!
Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? வெள்ளை ஆதாரிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விவரங்கள் இதோ..!
சிந்து சமவெளியை திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தியவர் - ஜான் மார்ஷலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி 
சிந்து சமவெளியை திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தியவர் - ஜான் மார்ஷலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி 
Embed widget