மேலும் அறிய

Annai Thamizhil Archanai scheme : கபாலீஸ்வரர் திருக்கோவிலில், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தார் சேகர் பாபு..!

47 கோவில்களை தேர்வு செய்து "அன்னை தமிழில் அர்ச்சனை" என விளம்பர பலகைகளும் வைக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

அறநிலையத்திற்கு சொந்தமான 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

இன்று (05.08.2021) சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை  தொடங்கி வைத்தார்.  பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், " தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. 1971ம் ஆண்டு, மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோவில்களில் தமிழில் செய்யப்படும்  என்றுசட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார்.  1974ம் ஆண்டு, இது தொடர்பான சுற்றறிக்கை இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

விரும்புகிறவர்கள் மட்டுமே தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம்.இதர மொழிகளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளை இத்திட்டம் தடுக்காது என்பதனை, 1998ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின் போது கலைஞர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார். பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில், இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை என்பதால் இன்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "விரைவில் அனைத்து கோயில்களுக்கும் 14 போற்றி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனை, முதல்வர் அவர்களே வெளியிடுவார். அம்மன்,ஈசன்,அம்பாள்,விநாயகர், வைணவம், சைவம் போன்ற வழிபாடுகளுக்கு உதவும் வகையில் போற்றி புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் தாங்கள் விரும்பும் போற்றி புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார். 

அர்ச்சர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், " ஏற்கனவே, மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1970ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இதற்கான பயிற்சி நிலையங்களும், வேத ஆகம்  பாட சாலை நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை அளிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 
சென்னை பிராட்வே-யில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், " திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பாஜக தலைவர்களே திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் "வசை பாடியவர்கள் கூட வாழ்த்தும்  நிலை" ஏற்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தி இனி அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இனி தமிழகத்தில் கோவில் திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது"என்றும் தெரிவித்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget