மேலும் அறிய

அடுத்த செக்! வலையில் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - அடுத்தடுத்து தள்ளிப்போகும் கிடுக்குப்பிடி!

மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் (2001-06) வீட்டுவசதி வாரியத்துறையின் அமைச்சராக இருந்தார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் (2001-06) வீட்டுவசதி வாரியத்துறையின் அமைச்சராக இருந்தார். 

அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,90,29,040  அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்டது.  இதையடுத்து கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.  

Minister Anitha Radhakrishnan asset hoarding case hearing adjourned to August 2 TNN அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையின் ஆட்டம் ; 90% விசாரணை முடிந்துவிட்டது - லஞ்ச ஒழிப்புத்துறை

அனிதா மீதான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசில் தற்போது அமைச்சராக இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர்மீதான வழக்கை நடத்தவேண்டியது மாநில அரசுதான். ஆனால், அனிதாவின் நலன்களைக் காப்பதில்தான் மாநில அரசு அக்கறையோடு செயல்படுகிறது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, நீதிமன்ற சட்டப்பிரிவு 301 (2), 302 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஆனால் அமலாக்கத்துறையின் வாதத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கவில்லை எனவும் 90 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையின் உதவி வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அமலாக்கத்துறையிடம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த செக்! வலையில் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - அடுத்தடுத்து தள்ளிப்போகும் கிடுக்குப்பிடி!

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில்  நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தம், மூத்த மகன் ஆனந்த பத்மநாபன் ஆகியோர் ஆஜராகவில்லை. இளைய மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜராகினர். 

இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணை வலையத்தில் சிக்கியுள்ள நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் சிக்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget