மேலும் அறிய

குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு மேய்க்கச்சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கரூர் மாவட்டம், வீரணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் விவசாயி. இவரது மகன் நவீன் குமார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்னும் விவசாயியின் மகன்கள் வசந்த் மற்றும் மயில் முருகன். 3 சிறுவர்களும் வீரணாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

தொடர் விடுமுறை என்பதால் சிறுவர்கள் மூன்று பேரும் தினசரி ஆடு மேய்க்கச்செல்வது வழக்கம். இதேபோல இன்று இவர்கள் 3 பேரும் புனவாசிபட்டியில் உள்ள நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

அப்போது அவர்கள் மேய்த்த ஆட்டுக்குட்டி அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தது. அந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அருகில், இருந்தவர்கள் 3 சிறுவர்கள் உடலை மீட்டனர். இதையடுத்து லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச்சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தால் லாலாபேட்டை பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

லாலாப்பேட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து 3 சிறுவர்கள் உயிரிழந்த இடத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் உள்ளபோது கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட சமூக ஆர்வலர் கங்கா அவர்கள் தெரிவிக்கையில் :- தங்களது குழந்தைகளை விளையாட செல்லும் போதும் சரி, எங்கேயாவது வெளியில் சுற்றும்போதும் சரி, மிகுந்த கவனத்துடன் பிள்ளைகளை பார்த்துக்கொள்வது பெற்றோரின் தலையாய கடமையாக உள்ளது. தற்போது பள்ளி விடுமுறையால் மாணவர்கள் சற்று விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்நிலையில் உடல் ஆரோக்கியமான விளையாட்டில் தங்களது பிள்ளைகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது தொற்று பரவும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டும் எனவும், நீண்ட நேரம் அலைபேசியில் யூட்யூப்பில் கேமில் அதிக நேரம் செலவிடுவதை தங்களது பெற்றோர்கள்தான் பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். வாயில்லா ஜீவனை காப்பாற்ற முயற்சி செய்து 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோக சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு பின்னராவது பெற்றோர்கள் விழிப்புடன் தங்களது பிள்ளைகளை பேணி காக்க வேண்டும் என கரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
​ரூ. 15 கோடியில் மாறப்போகும் மதுராந்தகம்! உள்ளூர் மக்களுக்குக் காத்திருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
​ரூ. 15 கோடியில் மாறப்போகும் மதுராந்தகம்! உள்ளூர் மக்களுக்குக் காத்திருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
Chennai Power Cut: சென்னையில ஜூலை 6-ம் தேதி (06.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 6-ம் தேதி (06.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Embed widget