மேலும் அறிய

குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு மேய்க்கச்சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கரூர் மாவட்டம், வீரணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் விவசாயி. இவரது மகன் நவீன் குமார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்னும் விவசாயியின் மகன்கள் வசந்த் மற்றும் மயில் முருகன். 3 சிறுவர்களும் வீரணாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

தொடர் விடுமுறை என்பதால் சிறுவர்கள் மூன்று பேரும் தினசரி ஆடு மேய்க்கச்செல்வது வழக்கம். இதேபோல இன்று இவர்கள் 3 பேரும் புனவாசிபட்டியில் உள்ள நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

அப்போது அவர்கள் மேய்த்த ஆட்டுக்குட்டி அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தது. அந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அருகில், இருந்தவர்கள் 3 சிறுவர்கள் உடலை மீட்டனர். இதையடுத்து லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச்சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தால் லாலாபேட்டை பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

லாலாப்பேட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து 3 சிறுவர்கள் உயிரிழந்த இடத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் உள்ளபோது கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட சமூக ஆர்வலர் கங்கா அவர்கள் தெரிவிக்கையில் :- தங்களது குழந்தைகளை விளையாட செல்லும் போதும் சரி, எங்கேயாவது வெளியில் சுற்றும்போதும் சரி, மிகுந்த கவனத்துடன் பிள்ளைகளை பார்த்துக்கொள்வது பெற்றோரின் தலையாய கடமையாக உள்ளது. தற்போது பள்ளி விடுமுறையால் மாணவர்கள் சற்று விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


குளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. கரூரில் பதறவைக்கும் சோகம்..

இந்நிலையில் உடல் ஆரோக்கியமான விளையாட்டில் தங்களது பிள்ளைகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது தொற்று பரவும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டும் எனவும், நீண்ட நேரம் அலைபேசியில் யூட்யூப்பில் கேமில் அதிக நேரம் செலவிடுவதை தங்களது பெற்றோர்கள்தான் பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். வாயில்லா ஜீவனை காப்பாற்ற முயற்சி செய்து 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோக சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு பின்னராவது பெற்றோர்கள் விழிப்புடன் தங்களது பிள்ளைகளை பேணி காக்க வேண்டும் என கரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget