மேலும் அறிய

Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 21 மீது நடவடிக்கை: தமிழக அரசு

Thoothukudi Firing: தூத்துக்குடி சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மனித உரிமை ஆணையம் தானாக வழக்கு எடுத்து விசாரித்து வந்தது. அதன் விசாரணைகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் வழக்கை சரியாக நடத்தி முடிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
அதில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுளது. மேலும், சம்பவம் நடைபெற்ற போது ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட எஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்ட 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விளக்கம் கேட்கபட்டதாகவும்,  அதற்கு அவர்களும் பதிலளித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விசாரணையில் உள்ள 21 பேருக்கும் துப்பாக்கிச்சூட்டும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 
 
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றது. மே 22ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டம் கலவரமாக வெடித்ததால் கூட்டத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் குற்றவாளிகளாக சுட்டு தள்ளியதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
 
இந்த ஆணையம் விசாரணை நடத்தி கடந்த 2022ம் ஆண்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை சட்டமன்றத்தில் 4 பகுதிகளாக முன் வைக்கப்பட்டன. நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த விசாரணை அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பது தெரிந்தும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அலட்சிய போக்கே கலவரத்து காரணம் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களை குறி வைத்து தலை, முதுகு பகுதியில் சுட்டுள்ளனர் என்றும், வன்முறை சம்பவத்தில் காவல்துறை வரம்புக்கு மீறி செயல்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Embed widget