மேலும் அறிய

என் மீது புகார் அளிக்காதவர்கள் யார்? காயத்ரி ரகுராம் விதிவிலக்கா? - ஆக்ரோஷமான அண்ணாமலை..

கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என அண்ணாமலை காய்த்ரி ரகுராமிற்கு பதிலளித்துள்ளார்.

கட்சியிலிருந்து யார் விளகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விளகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என அண்ணாமலை காய்த்ரி ரகுராமிற்கு பதிலளித்துள்ளார். 

நேற்று காயத்ரி ரகுராம் பா.ஜ.க கட்சியிலிருந்து விலகுவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் ”பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்திருந்தார். 

அவசர கதியில் நான் எடுத்த இந்த முடிவுக்கான பெருமை அண்ணாமலையையே சேரும். அவரை பற்றி நான் குறைவாகவே சிந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு தரம் குறைந்த பொய்யர் மற்றும் அதர்மம் நிறைந்த தலைவர். கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி மிகுந்த அன்பையும், மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன். அது ஒரு பெரிய பயணம். மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இந்து தர்மம் அல்ல. அண்ணாமலையின் கீழ் என்னால் தொடர முடியாது, சமூக நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

பெண்களே பாதுகாப்பாக இருங்கள், யாரோ ஒருவர் உங்களை காப்பாற்றுவார் என எதிர்பார்க்காதீர்கள். யாரும் வரமாட்டார்கள், நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள், உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்காதீர்கள். அனைத்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு மோசமான நபர். அதோடு, எனக்கு தொந்தரவு அளிக்கும் வார் ரூம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

”புதுக்கோட்டையில் இறையூர் கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. திமுக சாதி இல்லா சமுதாயம் உருவாக்குவோம் என கூறுகின்றனர். ஆனால் புதுக்கோட்டையில் தொடர்ந்து பிரச்சனை – இரட்டை டம்ப்ளர் பிரச்சனை, சமூதாய தண்ணீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் தான் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை ஆர்.கே நகரில் எம்.எல்.ஏ, பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரை வெறும் கையில் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். எம்.எல்.ஏ எபினேசர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக – மஸ்தான் தஸ்தகீர் கொலை வழக்கில், நிர்வாகிகளுக்கே பாதுக்காப்பு இல்லை. மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

மேலும் “கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக ஒருவர் வெளியேறுகின்றனர். என் மேல் புகார் அளிக்காதவர்கள் யாரும் இல்லை. புகார் அளிப்பது நல்லது தான் என்றும் அது தான் பேசும் பொருளாக மாறுகிறது. காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நல்லா இருக்கட்டும். என் மீது புகார் வைக்காதவர்கள் யாரும் இல்லை" என குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget