மேலும் அறிய

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 4,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள, பரிசல், மசாஜ், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படும்  தண்ணீரை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து  கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக, காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 60,000  கனஅடி வரை இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து முழுவதுமாக குறைந்தது. தொடர்ந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 800 கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல்லில், காவிரி ஆறு வறண்டு நீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.

இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அஞ்செட்டி, தளி, ஒகேனக்கல் வனப் பகுதி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று காலை காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 4,000 கன அடியாக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 4,000 கன அடியாக அதிகரிப்பு

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாறைகளை மூழ்கடித்துவாறு தண்ணீர் செல்கிறது. மேலும் ஒகேனக்கல் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து மழை அதிகரித்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் தற்பொழுது வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள, பரிசல், மசாஜ், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறக்காமல், கர்நாடகா அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எனவே தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்திற்கு, கடந்த நான்கு மாதங்களாக திறக்க வேண்டிய தண்ணீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்;  அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்;  அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
அடுத்த லெவலுக்கு தயார்...10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சந்தானம் ஆர்யா கூட்டணி
அடுத்த லெவலுக்கு தயார்...10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சந்தானம் ஆர்யா கூட்டணி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
Embed widget