மேலும் அறிய

Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கு.. ஜாமீன் மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு..!

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு வழங்கப்படும் என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

செந்தில் பாலாஜி கைது செய்ததை எதிர்த்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அப்போது அவர், “ செந்தில் பாலாஜியை கைது செய்ததில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சோதனையின் போது செந்தில் பாலாஜி சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்களை கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமின்றி தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தி உள்ளது. 

நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பிரிவு ஐம்பத்தின்படி சம்மன் கொடுத்து விசாரணை நடத்தாமல் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.? கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டிய நடைமுறையை பின்பற்றவில்லை” என தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதம் செய்கையில், “ எதற்காக கைது செய்தோம் என்பது குறித்த காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தோம். கைது செய்வதற்காக அவரிடம் மெமோ அளித்த பொழுது அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்தார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிராகரிக்க கூற முடியாது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும். ரிமாண்ட் உத்தரவு சரியானது. இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், இன்று திடீரென உடல்நலக்குறைவு என்கிறார்"என அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்யப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 

தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களை சந்திந்தபோது, “ ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கை மீது நம்பிக்கை இல்லை என்றது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜிக்கு பைபாச் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்போம் என்கிறது அமலாக்கத்துறை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் அளிக்கவில்லை..? 

கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் ஏன் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு அமலாக்கத்துறையிடம் பதில் இல்லை. அமலாக்கத்துறை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் உறுதி செய்து அளித்த மருத்துவ அறிக்கை பற்றி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.” என தெரிவித்தனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget