மேலும் அறிய

Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கு.. ஜாமீன் மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு..!

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு வழங்கப்படும் என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

செந்தில் பாலாஜி கைது செய்ததை எதிர்த்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அப்போது அவர், “ செந்தில் பாலாஜியை கைது செய்ததில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சோதனையின் போது செந்தில் பாலாஜி சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்களை கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமின்றி தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தி உள்ளது. 

நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பிரிவு ஐம்பத்தின்படி சம்மன் கொடுத்து விசாரணை நடத்தாமல் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.? கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டிய நடைமுறையை பின்பற்றவில்லை” என தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதம் செய்கையில், “ எதற்காக கைது செய்தோம் என்பது குறித்த காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தோம். கைது செய்வதற்காக அவரிடம் மெமோ அளித்த பொழுது அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்தார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிராகரிக்க கூற முடியாது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும். ரிமாண்ட் உத்தரவு சரியானது. இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், இன்று திடீரென உடல்நலக்குறைவு என்கிறார்"என அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்யப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 

தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களை சந்திந்தபோது, “ ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கை மீது நம்பிக்கை இல்லை என்றது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜிக்கு பைபாச் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்போம் என்கிறது அமலாக்கத்துறை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் அளிக்கவில்லை..? 

கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் ஏன் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு அமலாக்கத்துறையிடம் பதில் இல்லை. அமலாக்கத்துறை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் உறுதி செய்து அளித்த மருத்துவ அறிக்கை பற்றி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.” என தெரிவித்தனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget