மேலும் அறிய

மாநிலங்களுக்கான சுயாட்சியை எட்ட அரசு உறுதியாக உள்ளது - ஆளுநரின் முழு உரை..!

மாநிலங்களுக்கான சுயாட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக சட்டப்பேரைவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது.

சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கலைவாணர் அரங்கம் வந்தார். அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் பேரவைச் செயலாளர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் கூட்டத்தொடர் நடைபெறும் பேரவைக்கு வருகை புரிந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார், அவர்களும் வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழில் காலை வணக்கம் என்று தனது உரையைத் தொடங்கினார். மேலும், எளிமையாக வாழுங்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுரை கூறினார். பின்னர். இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் பேசியதாவது,

“சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய கொள்கைளை அடித்தளமாக கொண்டது எங்கள் அரசு. அரசின் ஒவ்வொரு செயலும், சட்டமும், திட்டமும், முயற்சியியும் இந்த கொள்கைகளை கொண்டிருக்கும். தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படும்.


மாநிலங்களுக்கான சுயாட்சியை எட்ட அரசு உறுதியாக உள்ளது - ஆளுநரின் முழு உரை..!

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம். தமிழ்மொழியை தொடர்ந்து இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு வலியுறுத்தும். மாநிலங்களுக்கான சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

கருணாநிதி சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார்.கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.


மாநிலங்களுக்கான சுயாட்சியை எட்ட அரசு உறுதியாக உள்ளது - ஆளுநரின் முழு உரை..!

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கருணாநிதி இல்லையென்றாலும் அவரது கொள்கைகள் இந்த அரசை வழிநடத்திச் செல்லும். ஒன்றிய அரசுடன் இந்த அரசு நல்லுறவைப் பேணும்.”

இவ்வாறு அவர் பேசினார். மேலும், தனது உரையை முடிக்கும்போது தமிழில் நன்றி, வணக்கம் என்று கூறி நிறைவு செய்தார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு கலைவாணர் அரங்கிலும், சேப்பாக்கம் செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget