மேலும் அறிய

Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில்வே நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்.. முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு

Kilambakkam Railway Station : கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு வழங்கியது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

Kilambakkam Railway Station : சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பண்டிகை நாட்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையை கடந்து செல்வதற்கே சுமார் 3 மணிநேரம் வரை ஆனது. இதற்கு தீர்வு காணும் வகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் போக்குவரத்து நிலையம் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அங்கு சென்று பேருந்துகளை பிடிக்க பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்பொழுது பொதுமக்கள் வந்து சேர்வதற்கு,  பேருந்து மற்றும் தங்களுடைய சொந்த வாகனத்தில் வருவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் பிரதான எதிர்பார்ப்பு மின்சார ரயில்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்பதுதான்.

இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. கிளாம்பாக்கத்திற்கு வண்டலூரில் இருந்து புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்  வழக்கமாக ரயில்வே திட்டங்களை ரயில்வே துறையை நிதி ஒதுக்கி செய்யும் ஆனால் தற்பொழுது இது தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் இந்தத் திட்டத்திற்கு சிஎம்டிஏ தரப்பில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதேபோல், திட்டத்திற்கான முதற்கட்ட தொகையாக 20 கோடி ரூபாய் ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்தடுத்து ஆகும் செலவினை கணக்கில்கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார்ப்போல் 30 சதவீதம் வரை,  கூடுதல் மின்சார ரயில்களை,  சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது மக்கள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு பேருந்துகள் மூலம் சுமார் ஒன்றரை மணிநேரம் வரை ஆகிறது எனவும் இதனால் பேருந்து புறப்படும் நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை உள்ளது எனவும் மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும் பேருந்து இயக்கம் தொடர்பான அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படாததால் மக்கள் கோயம்பேட்டிற்கும் கிளாம்பாக்கத்திற்கும் அலைந்து குழப்பம் அடைகிறார்கள் என சொல்லப்படுகிறது. பேட்டரி கார்கள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து வருகின்றனர்.

Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி..! பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்து அரசிதழில் வெளியீடு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget