மேலும் அறிய

Coimbatore Car Blast : கார் வெடித்த வழக்கு விசாரணை : எவ்வாறு நடக்கிறது..? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

கார் வெடிப்பு விபத்து சம்பவத்தைப் பொறுத்தவரை என்ஐஏ அலுவலர்கள், IB புலனாய்வு முகமை அலுவலர்களும் முழுமையாக பங்குபெற்றிருக்கிறார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டார் என்றும், கார் வெடிப்பு விபத்து சம்பவத்தைப் பொருத்தவரை என்.ஐ.ஏ. அலுவலர்கள், IB புலனாய்வு முகமை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் அவர்களும் பங்குபெற்றிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை பற்றி தெரிவித்ததாவது:

என்ஐஏ, ஐபி அலுவலர்களுடன் இணைந்து விசாரணை

தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து என்.ஐ.ஏ. அலுவலர்களும் விசாரணை நடத்தியுள்ளனர். இதுபோன்ற கார் வெடிப்பு சம்பவம் நடந்தால் அதை முதலில் தமிழ்நாடு காவல்துறை எப்.ஐ.ஆர். போட்டு விசாரணை நடத்த வேண்டும். அதுதான் கோவை சம்பவத்திலும் நடந்தது.

 வேறு மாநிலம், வேறு நாட்டுடன் பயங்கரவாத தொடர்பு இருந்தால் என்.ஐ.ஏ. தாங்களாகவே அந்த வழக்கை நேரடியாக விசாரிக்க முடியும். கடந்த 25ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. அலுவலர்களும் விசாரணையில் இணைந்திருந்தனர்.

அனைத்து சம்பவங்கள் குறித்தும் நம் மத்திய உளவுத்துறையான IB (Intelligence Bureau) புலனாய்வு முகமைக்கும், தேசியப் புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. இங்கே இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் ஏற்கெனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டிருக்கக் கூடியவர். விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டவர் அதன்பின் ஏன் விடுவிக்கப்பட்டார் ? என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. அதுபற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை.

’மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’

அப்போது விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அலுவலர்களுக்கு தான் அது தெரியும். எனவே இந்த விஷயத்தில்  23ஆம் தேதி காலை முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் காவல்துறையும், என்ஐஏவும் இணைந்தே தான் விசாரணையில் ஈடுபட்டது.

எனவே அவர்களை விடுத்துவிட்டு தமிழ்நாடு அரசின் காவல் துறை மட்டு விசாரணையில் ஈடுபட்டது போல் மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது சரியல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின் சம்பவம் நடந்த அதிகாலை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன் நேரடி கண்காணிப்பில் அறிவுரை வழங்கி விசாரணை சரியான கோணத்தில் செல்ல வேண்டும் என முடுக்கிவிட்டதோடு, தீபாவளி அன்று பதட்டமான மனநிலை வந்துவிடாமல் இயல்பான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வைத்திருக்க நடவடிக்க எடுத்துள்ளார்.

அவருடைய சீரிய வழிகாட்டுதலின்கீழ் இயங்கக்கூடிய காவல் துறை இந்த விஷயத்தை மிகத் திறமையாகக் கையாண்டு தமிழ்நாடு காவல் துறை  புலனாய்வில் ஈடுபட்டுள்ளது. இந்திய அளவில் டெல்லி கோர்ட் காம்ப்ளக்ஸில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வெடிப்பு சம்பவம் நடந்தது. ஆனால் என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கையை ஜனவரி 13, 2022இல் தான் அளித்தது.

முந்தைய வழக்குகளும் என்ஐஏ அறிக்கையும்

அதேபோல் மேற்கு வங்கம், கெஜூரியில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் ஜனவரி 25ஆம் தேதி தான் என்ஐஏ முதல் தகவல் அறிக்கை அளித்தது.

அதேபோல் மேற்கு வங்கம் நைஹாத்தியில் ஜனவரி 27ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் நிகழ்ந்த வெடி விபத்துகளில்,  என்ஐ ஏவின் முதல் தகவல் அறிக்கைக்கு போகக் கூடிய கால அளவு ஒரு வாரம் முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை ஆகும். 

இந்த கார் வெடிப்பு விபத்து சம்பவத்தைப் பொறுத்தவரை என்ஐஏ அலுவலர்கள், IB புலனாய்வு முகமை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் அவர்களும் பங்குபெற்றிருக்கிறார்கள். முழு தரவுகளும் முதலமைச்சரின் மேற்பார்வையில் திரட்டி நான்கு நாள்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலே எந்தக் காலத்திலும் எந்த சூழலிலும் எந்த ஒரு தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைக்கும் முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மண்ணில் தீவிரவாத செயலுக்கு அனுமதி இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அதில் மிக உறுதியாக இருக்கிறார்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget