மேலும் அறிய

Minister Thangam Thennarasu: என்.எல்.சி. விவகாரம்: "வன்முறையை அரசு அனுமதிக்காது” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Minister Thangam Thennarasu: என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தங்கம் தென்னரசு விளக்கம்:

இந்நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”கால்வாய்  தோண்டும் பணிக்காக 6 கிராமங்களில் இருந்து என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 30 ஏக்கர் நிலம் மட்டுமே என்.எல்.சியிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது. என்.எல்.சி. சுரங்கப் பணிகளை மேற்கொள்ள பரவனாறு மாற்றுக் கால்வாய் பணி அவசியமாக இருக்கிறது. இந்த மாற்றுப்பாதை அமைக்கப்பட்டால் தான் சுரங்க பணிகள் மேற்கொண்டு நடைபெறும். சுரங்கத்தில் மற்ற பணிகள் நடந்ததால் தான் மின்சாரம் உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். 2006 முதல் 2013ஆம் ஆண்டு வரை 352 விவசாயிகளிடம் இருந்து 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  இந்த 104 ஹெக்டேர் பரப்பளவுக்குள் வரக்கூடிய 382 விவசாயிகளுக்கு 6 லட்ச ரூபாய் வழங்கப்படும் நிலையில், 10 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்றார்.

”அதேபோன்று, 2006 முதல் 2013ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 405 விவசாயிகளிடம் இருந்து 83 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஏக்கருக்கு ரூ.2.6 லட்சமும், ரூ.14 லட்சம் கருணை தொகையும் வழங்கப்பட உள்ளது. 2000ஆ ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 311 விவசாயிகளிடம்  இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஏக்கருக்கு 2.4 லட்ச ரூபாய் வழக்கப்பட்டுள்ளது.  நிலம் கையகப்படுத்தப்பட்ட 311 விவசாயிகளுக்கும் தற்போது ரூ.6 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். 

கண்டனம்:

தொடர்ந்து பேசிய அவர், ”என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக் களமாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.  என்.எல்.சிக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். ஆனால்  தற்போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. விவசாயிகளை கேடயமாக வைத்துக் கொண்டு நடத்திய போராட்டம் கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே ஒரு பிரச்சனையை பேசி தீர்வு காண முடியாமல் இதுபோன்று வன்முறையை கையில் எடுத்துள்ளனர். வன்முறையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.

பொது அமைத்திக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஜனநாயாக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பெரும் வன்முறையை கிளப்பியது கடும் கண்டனத்திற்குரியது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Embed widget