மேலும் அறிய

Minister Thangam Thennarasu: என்.எல்.சி. விவகாரம்: "வன்முறையை அரசு அனுமதிக்காது” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Minister Thangam Thennarasu: என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தங்கம் தென்னரசு விளக்கம்:

இந்நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”கால்வாய்  தோண்டும் பணிக்காக 6 கிராமங்களில் இருந்து என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 30 ஏக்கர் நிலம் மட்டுமே என்.எல்.சியிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது. என்.எல்.சி. சுரங்கப் பணிகளை மேற்கொள்ள பரவனாறு மாற்றுக் கால்வாய் பணி அவசியமாக இருக்கிறது. இந்த மாற்றுப்பாதை அமைக்கப்பட்டால் தான் சுரங்க பணிகள் மேற்கொண்டு நடைபெறும். சுரங்கத்தில் மற்ற பணிகள் நடந்ததால் தான் மின்சாரம் உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். 2006 முதல் 2013ஆம் ஆண்டு வரை 352 விவசாயிகளிடம் இருந்து 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  இந்த 104 ஹெக்டேர் பரப்பளவுக்குள் வரக்கூடிய 382 விவசாயிகளுக்கு 6 லட்ச ரூபாய் வழங்கப்படும் நிலையில், 10 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்றார்.

”அதேபோன்று, 2006 முதல் 2013ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 405 விவசாயிகளிடம் இருந்து 83 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஏக்கருக்கு ரூ.2.6 லட்சமும், ரூ.14 லட்சம் கருணை தொகையும் வழங்கப்பட உள்ளது. 2000ஆ ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 311 விவசாயிகளிடம்  இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஏக்கருக்கு 2.4 லட்ச ரூபாய் வழக்கப்பட்டுள்ளது.  நிலம் கையகப்படுத்தப்பட்ட 311 விவசாயிகளுக்கும் தற்போது ரூ.6 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். 

கண்டனம்:

தொடர்ந்து பேசிய அவர், ”என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக் களமாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.  என்.எல்.சிக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். ஆனால்  தற்போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. விவசாயிகளை கேடயமாக வைத்துக் கொண்டு நடத்திய போராட்டம் கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே ஒரு பிரச்சனையை பேசி தீர்வு காண முடியாமல் இதுபோன்று வன்முறையை கையில் எடுத்துள்ளனர். வன்முறையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.

பொது அமைத்திக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஜனநாயாக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பெரும் வன்முறையை கிளப்பியது கடும் கண்டனத்திற்குரியது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

உடல் சிதறி உயிரிழந்த தொழிலாளி..அதிகாலையில் பயங்கரம்.. கும்மிபிடிப்பூண்டியில் நடந்தது என்ன?
உடல் சிதறி உயிரிழந்த தொழிலாளி..அதிகாலையில் பயங்கரம்.. கும்மிபிடிப்பூண்டியில் நடந்தது என்ன?
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget