மேலும் அறிய

தயவுசெய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்..

மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கூழையூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு நீட் தேர்வின்போதும் மாணவர் தற்கொலைகளை எதிர்கொண்ட சமூகம், இந்த தேர்வின்போதும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை பார்க்கிறது. இது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் 22 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மூலம் இதுவரை 22 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தயவுசெய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்..

மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு 3 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 816 தடுப்பூசிகள் வந்துள்ளது. தமிழகத்தில் போலி தடுப்பூசி கிடையாது. போலி மருத்துவர்கள் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. கேரளம் மாநிலத்தில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மார்க்கமாக வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலமுறை பேசியுள்ளோம். எனவே, வரும் திங்கட்கிழமை கூட்டத்தொடரின் இறுதிநாளாகும். அன்றைய தினம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுக்கவில்லை. அதுபோன்று இல்லாமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போதிய அழுத்தம் தந்து நீட் தேர்வில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.


தயவுசெய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்..

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 18 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மாணவர்கள் மனம் தளரக்கூடாது”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.