மேலும் அறிய

திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!

திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ககரலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹித் (26).  இவரது மனைவி பார்வதி (24). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக முன்பே ப்ளான் பண்ணி உள்ளனர். இதையடுத்து அன்றைய தினம் திருமணம் செல்ல வேண்டி பார்வதி தனது கணவர் ரோஹித்திடம் தயாராக சொல்லியுள்ளார்.

ஆனால் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே கிளம்பிய ரோகித் பயங்கர குடி போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பார்வதி மனமுடைந்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் கணவர் ரோகித்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதுகுறித்த தகவல் வெளியாகியது. இதனிடையே மனைவி பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவர் ரோகித் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராம் அர்ஜ் கூறுகையில், “வியாழக்கிழமை மாலை ககரலா கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் (26) குடும்பத்தினருடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவரது மனைவி பார்வதி (24) அவரை தயாராகும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் வெளியே சென்று அதிகமாக குடிபோதையில் இருந்தார்.

கணவரின் நடத்தையால் மனமுடைந்த பார்வதி கூரையில் உள்ள தாழ்ப்பாள் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், தனது மனைவி இறந்ததை அறிந்த ரோஹித், மிர்சாபூர் பேலா ரயில் நிலையம் அருகே ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget