திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ககரலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹித் (26). இவரது மனைவி பார்வதி (24). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக முன்பே ப்ளான் பண்ணி உள்ளனர். இதையடுத்து அன்றைய தினம் திருமணம் செல்ல வேண்டி பார்வதி தனது கணவர் ரோஹித்திடம் தயாராக சொல்லியுள்ளார்.
ஆனால் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே கிளம்பிய ரோகித் பயங்கர குடி போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பார்வதி மனமுடைந்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் கணவர் ரோகித்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதுகுறித்த தகவல் வெளியாகியது. இதனிடையே மனைவி பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவர் ரோகித் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராம் அர்ஜ் கூறுகையில், “வியாழக்கிழமை மாலை ககரலா கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் (26) குடும்பத்தினருடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவரது மனைவி பார்வதி (24) அவரை தயாராகும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் வெளியே சென்று அதிகமாக குடிபோதையில் இருந்தார்.
கணவரின் நடத்தையால் மனமுடைந்த பார்வதி கூரையில் உள்ள தாழ்ப்பாள் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், தனது மனைவி இறந்ததை அறிந்த ரோஹித், மிர்சாபூர் பேலா ரயில் நிலையம் அருகே ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

