மேலும் அறிய

திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!

திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணத்தில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ககரலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹித் (26).  இவரது மனைவி பார்வதி (24). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக முன்பே ப்ளான் பண்ணி உள்ளனர். இதையடுத்து அன்றைய தினம் திருமணம் செல்ல வேண்டி பார்வதி தனது கணவர் ரோஹித்திடம் தயாராக சொல்லியுள்ளார்.

ஆனால் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே கிளம்பிய ரோகித் பயங்கர குடி போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பார்வதி மனமுடைந்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் கணவர் ரோகித்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதுகுறித்த தகவல் வெளியாகியது. இதனிடையே மனைவி பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவர் ரோகித் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராம் அர்ஜ் கூறுகையில், “வியாழக்கிழமை மாலை ககரலா கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் (26) குடும்பத்தினருடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவரது மனைவி பார்வதி (24) அவரை தயாராகும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் வெளியே சென்று அதிகமாக குடிபோதையில் இருந்தார்.

கணவரின் நடத்தையால் மனமுடைந்த பார்வதி கூரையில் உள்ள தாழ்ப்பாள் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், தனது மனைவி இறந்ததை அறிந்த ரோஹித், மிர்சாபூர் பேலா ரயில் நிலையம் அருகே ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin greets Rahul : 'உடன்பிறப்பை தவிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
'உடன்பிறப்பை தவிர்த்த மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
Mojtaba Vs Trump: “ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
“ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
Annamalai: ”திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்” CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை
”திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்” CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை
TN Assembly LIVE Today: சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
Mekedatu dam : ’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!
'காவிரி நீரை விட்டுத் தர முடியாது’ கர்நாடக அரசுக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு..!
Premalatha's Fiery Speech : ’காவிரி நீர் விவகாரம்’ சட்டப்பேரவையில் பிரேமலதா மாஸ் பேச்சு – வியந்து பார்த்த விஜய்..!
Premalatha's Fiery Speech : ’காவிரி நீர் விவகாரம்’ சட்டப்பேரவையில் பிரேமலதா மாஸ் பேச்சு – வியந்து பார்த்த விஜய்..!
Senthil Balaji: ஜெயிலுக்கு நோ, செந்தில் பாலாஜிக்கு குவியும் ஆஃபர்கள்..! ADMK, BJP மாறி மாறி அழைப்பு - DMKவிற்கு டாடா?
ஜெயிலுக்கு நோ, செந்தில் பாலாஜிக்கு குவியும் ஆஃபர்கள்..! ADMK, BJP மாறி மாறி அழைப்பு - DMKவிற்கு டாடா?
Embed widget