மேலும் அறிய

Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள், தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை, அம்மாடி, இவ்வளவா என்று வியக்கும் அளவிற்கு உள்ளன.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட தங்க, வெள்ளி நகைகள் மற்றும் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அரசு கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கர்நாடக அரசின் வசமுள்ள ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க் கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு செலவு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்திவிட்டு, நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, சொத்துகளுக்கு உரிமை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கினால், சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால், ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்களை, பிப்ரவரி 14, 15 தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிற்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இன்று 6 பெட்டிகளில் நகைகள், ஆவணங்கள் வைக்கப்பட்டு, தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக அரசிடம் 27 கிலோ நகைகள், 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்கள் ஒப்படைப்பு

தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில், ஜெயலலிதாவின் 1.2 கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணமும் அடங்கும். மேலும், ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், ஜெயலலிதாவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு, வாட்ச்சுகள், 60 கிராம் எடையுள்ள தங்க பேனா ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இதேபோல், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள 1,526 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்படைக்கப்பட்ட நகைகள், சொத்துகளை என்ன செய்வது என்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா ரூ.20 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளதாகவும், வழக்கிற்கான செலவாக கர்நாடக அரசு ரூ.7 கோடி கேட்டுள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget