தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? - தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த அப்டேட்!
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பெயர் சேர்க்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதியை தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
2026ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியிட்டப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பல ஆயிரம் தொடங்கி லட்சம் வரையிலான வாக்குகள் நீக்கப்பட்டது.
இரண்டு முறை பதிவு, உயிரிழந்தவர்கள், சம்பந்தப்பட்ட தொகுதியில் இல்லாதவர்கள் என பலரின் வாக்குகளும் நீக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர்.படிவம் சரியாக நிரப்பாதவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வாக்குரிமை இருப்பவர்கள் பெயர் விடுபடக்கூடாது என மும்முரமாக செயல்பட்டு மக்களுக்கு உதவினர்.
இரண்டு மாதமாக நடந்த சிறப்பு முகாம்கள்
இதனிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பெயர் சேர்க்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த ஒன்றரை மாத காலமாக வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று வாக்குரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்தனர். இப்படியான நிலையில் ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைய வேண்டிய சிறப்பு முகாமானது ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஏற்கனவே பிப்ரவரி 3வது வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இந்த கால அவகாசத்தால் பட்டியல் வெளியாவது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது.
அதேபோல் தமிழக சட்டமன்ற தேர்தலின் தேதியும் தள்ளிப்போக கூடிய சூழல் உண்டாகும் என பலரும் கருதினர். ஆனால் பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















