![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Weather Update: ரெடி... ரெடி... குடையை எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![TN Weather Update: ரெடி... ரெடி... குடையை எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை! Tamil Nadu Weather Forecast Heavy Rain chances from tomorrow december 31 for 2 days- chennai meteorological department TN Weather Update: ரெடி... ரெடி... குடையை எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/39e43509f22c601ed3602c71f98ba292_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை,புதுச்சேரி, காரைக்காலில் நாளை கனமழை பெய்யலாம் எனவும், இதுவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகின்ற 30 ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல், 31 ம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், ஆங்கில புத்தாண்டான 1 ம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2 ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும், அதற்கு அடுத்த நாளான 3 ம் தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
30.12.2021 முதல் 03.01.2022 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசம் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிகையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)