![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Urban Localbody Election | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன?
வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கெனவே வகித்த பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![Urban Localbody Election | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன? Tamil Nadu Urban Local Body Election 2022 Disqualification if petition is filed in urban election without resignation state election commission Urban Localbody Election | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/17/04e9313039da683a5b92ea0e4e15b5a8_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்து விலகாமல் நகப்புறத் தேர்தலில் மனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கெனவே வகித்த பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
மேற்படி பதவியிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊரட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்ப்புறத் உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேர்வில், அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 38 (3) (g) அல்லது 43 (6)-இன் படி, அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு மேற்படி சட்டம், பிரிவு 41 (1)இன் படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதி நீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
#JUSTIN | உள்ளாட்சி பிரதிநிதிகள் - மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை https://t.co/wupaoCQKa2 | #LocalBodyElections #Elections2022 pic.twitter.com/P5fYMmbwnP
— ABP Nadu (@abpnadu) January 29, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)