மேலும் அறிய

''கமுக்கமாக கர்நாடகா கட்டிய அணை.. ஒரு சொட்டு தண்ணி தமிழ்நாட்டுக்கு வராது'' - கொதிக்கும் விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றை நம்பி 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தென் பெண்ணையாற்றின் நீரை கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்கண்டேய நதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு 2018-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்தநிலையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்பாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.


'கமுக்கமாக கர்நாடகா கட்டிய அணை.. ஒரு சொட்டு தண்ணி தமிழ்நாட்டுக்கு வராது'' - கொதிக்கும் விவசாயிகள்!

அப்போது கர்நாடக அரசு அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் கோலார், பங்காருபேட்டை, மாலூர் உள்பட 45-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்க இந்த அணை கட்டுவதாக தெரிவித்தனர். இதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு, தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவகாரம் பற்றி பேசப்படவில்லை. இந்த நேரத்தில் சத்தமின்றி தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டி முடித்து விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இந்த அணை விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுமான பணிகள் முடிந்து மதகுகள் மட்டும் இன்னும் அமைக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும் இந்த அணையில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.


'கமுக்கமாக கர்நாடகா கட்டிய அணை.. ஒரு சொட்டு தண்ணி தமிழ்நாட்டுக்கு வராது'' - கொதிக்கும் விவசாயிகள்!

430 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த யார்கோள் அணையில் 165 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா முழு முடக்க காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கர்நாடகா அணையைக் கட்டி முடித்து இருக்கிறது. கர்நாடக மாநில வனப் பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும்.


'கமுக்கமாக கர்நாடகா கட்டிய அணை.. ஒரு சொட்டு தண்ணி தமிழ்நாட்டுக்கு வராது'' - கொதிக்கும் விவசாயிகள்!

இது குறித்து தமிழக விவசாயிகள் கூறியதாவது, கர்நாடக மாநிலம் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக தற்போது யார்கோள் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி உள்ளது. இது கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு வராது. ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் நீரை தேக்கும் கட்டமைப்புகளை மேற்கொள்ள கூடாது என்ற ஒப்பந்தம் உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தை உடனடியாக அணுகி தீர்வு காண வேண்டும் என்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget