மேலும் அறிய

'ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!

நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும், நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது

இந்திய மன்னர்களின் வரலாற்றிலேயே கடல் கடந்து  போரிட்டு, வடக்கே துங்கப்பத்திரை நதிக்கரை முதல் கிழக்கே கடாரம் ஸ்ரீவிஜயம் வரை ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய மா மன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக அறிவித்து பெருமையடைந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!

ராஜராஜசோழனுக்கும் – வானவன்மாதேவிக்கு பிறந்த ராஜேந்திரசோழன், தனக்கென அமைத்த வரலாற்று சிறப்புமிக்க தலைநகரம் தான் ‘கங்கை கொண்ட சோழபுரம்’.  ராஜேந்திரசோழனுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களுடன் போரிட்டு, அந்த பாண்டிய மன்னரை வென்றான் பராந்தக சோழன், போரில் தோற்று ஓடிய பாண்டிய மன்னன் தனது மணிமுடியை ஈழம் சென்று பதுக்கி வைத்தான்.  அதனை கடல் கடந்து சென்று கைப்பற்றிய ராஜேந்திர சோழனை இப்படி வர்ணிக்கிறது அவரது மெய்கீர்த்தி

‘பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்

ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்

முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த

சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்

தெண்டிரை ஈழ மண்டல முழுவதும்’.

ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!

கங்கை கொண்ட சோழபுரம்

ராஜேந்திர சோழனின் வெற்றிகளில் மணிமகுடமாக திகழ்வது அவனது படை கங்கை வரை சென்று இடையில் இருந்து அத்தனை நிலங்களையும், மன்னர்களையும் வென்று கங்கை நதியின் புனித நீரை எடுத்து வந்ததுதான். இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் கங்கைநீரை எடுத்த இடம்பற்றி

"நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும், நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது”என குறிப்பிடப்பட்டிருக்கிறது.ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!

கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர்படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரை வரை சென்று வரவேற்றான் என்று கல்வெட்டுகள் ஆதாரம் புகட்டுகின்றன. அந்த கங்கை நீரால் கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தான் ராஜேந்திர சோழன். இதனை ‘இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருகின்ற இடத்து திருவடி தொழுது’ என கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.

 

ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!
காம்போஜம் நாட்டை வென்ற பின் கொண்டுவரப்பட்ட தேர்

ராஜேந்திர சோழனிடம் தோற்றுப்போன, இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன், தென் இலங்கை சென்று ஒளிந்துக்கொண்டான். அவனைத் தேடிப்பிடித்த ராஜேந்திரசோழன், சோழ நாட்டிற்கு அவனை கைதியாக கொண்டுவந்தான். அவனது மகன் காஸ்யபன், தென்னிலங்கையில் தனது தந்தையின் தளபதிகள் உதவியோடு, எழுச்சி பெற்று விக்கிரமபாகு என்ற பெயரில் சிங்கள அரசை நிறுவினான். விடுவான சோழன் ? மீண்டும் இலங்கை மீது படையெடுத்து சிங்கள சாம்ராஜ்ஜியத்தையோ அடியோடு அழித்து, விக்கிரமபாகுவையும் கொன்றழித்தான்.ராஜேந்திர சோழன்’ தமிழ் மரபின் தலைசிறந்த அரசன்..!

இப்படி பெரும் வீரத்தோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் அவதரித்த தினம்தான், ஆடி மாதம் வரும் திருவாதிரை நன்னாள்.  திருவாதிரை நட்சத்திர நாளில் திருவொற்றியூர், விருத்தாசலம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவன் குழந்தை பருவத்தை திருவலங்காடு செப்பேடு 86 இப்படி குறிப்பிடுகிறது ‘இராஜராஜனின் மகனாக மதுராந்தகன் பிறந்தான். அரசனுக்குரிய எல்லா இலட்சணங்களும் உடையவன். சிவபெருமானால் எரிக்கப்படாத மற்றொரு மன்மதனை போன்ற அழகன்’  அதேபோல, ‘அவன் தன் புன்னகையாலும் உடலின் அழகாலும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்டினான். எதிரிகளுக்கு பேரச்சத்தை ஒவ்வொறு நாளும் அளித்தான்’ என கரந்தை செப்பேடு குறிப்பிடுகிறது.

இப்படி எதிரி நாட்டு மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், நாட்டு மக்களுக்கு நல்ல பண்பாளனாகவும் விளங்கி புகழ்பெற்ற ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் பல்லாண்டு கால கோரிக்கைக்கு செவி மடுத்து, இப்போது அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Embed widget