மேலும் அறிய

குட் நியூஸ் மக்களே ! சென்னைக்கு இனி மின்னல் வேகத்தில் போகலாம் ; தயாரான 4 வழிச்சாலை !

கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கடலுார் மாவட்ட எல்லையான ஸ்ரீ முஷ்ணம் பிரிவு சாலை வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு 98 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

கடலூர்:  விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் இடையே நான்கு வழிச்சாலை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பள்ளம் படுகுழியான VKT சாலைக்கு மாற்றாக, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தபட உள்ளது.

சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக தினம்தோறும் பலாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், கடலுார் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,) தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.

அதேபோல், விருத்தாசலம் நகரில் இருந்து சென்னை மார்க்கத்தில், உளுந்துார்பேட்டை நகரம் வரை 22 கி.மீ., தொலைவிற்கு, ஆசிய வங்கி நிதியுதவியுடன் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் 136 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், சென்னை - ஜெயங்கொண்டம் சாலை, இருவழி சாலையாக இருந்ததாலும், அடிக்கடி உள்வாங்கி பழுதடைவதாலும், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

இதையடுத்து, விருத்தாசலம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், விருத்தாசலம் புறவழிச்சாலையில், சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8.5 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேலும், ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கடலுார் மாவட்ட எல்லையான ஸ்ரீ முஷ்ணம் பிரிவு சாலை வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு 98 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

அதுபோல், அரியலுார் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் அம்மாவட்ட எல்லையான ஆத்துக்குறிச்சி முதல் ஜெயங்கொண்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 90 சதவீத பணிகள் முழுமையடைந்த நிலையில், இரு இடங்களில் கல்வெர்ட் மற்றும் கல்வெர்ட் இணைப்பு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு பெற வாய்ப்புள்ளதால், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னைக்கு எளிதில் செல்ல முடியும்.

வி.கே.டி., சாலைக்கு மாற்று வழி...!

தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு, வடலுார், பண்ருட்டி, உளுந்துார்பேட்டை மார்க்கமாக வி.கே.டி., சாலையில் வாகனங்கள் சென்னைக்கு செல்கின்றன. அதில், பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் பள்ளம் படுகுழியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலை

விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்ததும், கும்பகோணத்தில் இருந்து டி.பழூர் வழியாக ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை வந்து, புறவழிச்சாலை வழியாக உளுந்துார்பேட்டை டோல்கேட் மூலம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளிதில் செல்ல முடியும். எனவே, வி.கே.டி., சாலைக்கு மாற்றாக, விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலை மாற வாய்ப்புள்ளது.

வெள்ளாறு பாலம் நிறைவு

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி - டி.வி.புத்துார் இடையே செல்லும் வெள்ளாற்றில், 20 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கியது. வெள்ளாற்றில் பில்லர்கள் எழுப்பப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பேன்கள் எனப்படும் மேல் தளங்களை ராட்சத கிரேன்கள் மூலம் பில்லர்கள் மீது துாக்கி வைத்து, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.  எனவே இனி மின்னல் வேகத்தில் செல்லலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget