Ration Card Special Camp : ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... மிஸ் பண்ணாதீங்க- நாளை சூப்பர் சான்ஸ்.! அரசு அசத்தல் அறிவிப்பு
Ration Card Special Camp: மலிவான விலையில் உணவுப்பொருட்களை பெறுவதற்கும், அரசின் உதவித்தொகை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை செய்ய நாளை சூப்பர் வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள்
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உணவுப்பொருட்களானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2.27 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 2.23 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் பரிசு தொகுப்பும், வெள்ள பாதிப்பு காலத்தில் நிவாரண உதவியும் பெறவும், மகளிர் உரிமை தொகை ரூ. 1000 பெறுவதற்கும் ரேஷன் கார்டுகளை அடிப்படை ஆதாரமாக வைத்து வழங்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டுகள்
எனவே ரேஷன் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு தினமும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 21 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 98.23% ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கார்டுகள் அச்சிடும் பணியானது நடைபெற்று வருகிறது.
மேலும் புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு தமிழக அரசின் tnpds என்ற இணையதளத்தில் ஒரு சில நிமிடங்களில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகளில் பெயர்களை மாற்றம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பெயர்களை சேர்க்க மற்றும் நீக்க அசத்தல் வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
நாளை சிறப்பு முகாம்
இதன் படி தமிழகம் முழுவதும் நாளை பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் (24.01.2026) இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் உணவு பொருட்கள் துறை அதிகாரிகள் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனால் ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக மேற்கொள்ள வாய்ப்பானது உருவாகியுள்ளது.அந்த வகையில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















