மேலும் அறிய

"போராட்டம் தொடர வேண்டும், தடைகளை தாண்ட வேண்டும்" திமுக மாநாட்டில் சோனியா காந்தி மாஸ் பேச்சு

தி.மு.க. மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. 

இந்த பிரம்மாண்ட மாநாட்டில், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

"ஏழை மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி"

இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, "தம்முடைய வாழ்க்கை முழுமையும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவரும், இந்திய தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரும் கலைஞர் என அழைக்கப்படக்கூடிய கருணாநிதி பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் தலைவர். ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, முதலமைச்சராக, நிர்வாகியாக அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

மாநிலம், மொழி, சாதி, மத நம்பிக்கை, இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு எல்லாரையும் சமத்துவாக பார்க்கக்கூடிய ஓர் அருமையான தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். தன் வாழ்நாளின்போது, அதிகமாக பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடும் போராளியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இன்று அது தேசிய இயக்கமாக உருவாகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

"குடும்பத்தின் மைய பொருளாக பெண்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது"

நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளை செய்திருக்கிறார்கள். மரபு வழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாசாரம் என்ற தடைகளை எல்லாம் மீறி அவர்கள் மிக அருமையான சாதனைகளை செய்து முடித்திருக்கிறார்கள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஏற்றங்களும் இருந்திருக்கின்றன. இறக்கங்களும் இருந்திருக்கின்றன. இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் ஒளிர்கிறார்கள்.

சிலவற்றை சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானத்தில், அறிவிலே, ஆற்றாலிலே, கலாசாரத்திலே, விளையாட்டிலே இவை எல்லாவற்றுக்கும் மேலாக நமது குடும்பத்தின் மைய பொருளாக குடும்பத்தின் மைய பொருளாக மக்கள் தலைவர்களாக அவர்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது. இருந்தாலும், இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர வேண்டும். பல தடைகளை தாண்ட வேண்டும்.

இருந்தாலும் நம் ஏழை எளிய சகோதரிகள் இன்னும் ஏராளமான தடையை தாண்டித்தான் இந்த சமத்துவத்தை பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்று கொள்ளப்பட்ட சாத்விகமான வன்முறையற்ற சுதந்திர போராட்டம் மகளிர் சுமத்துவத்தை முன்னிலைப்படுத்தியது" என்றார்.

தமிழ்நாட்டை புகழ்ந்து பேசிய சோனியா காந்தி, "பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே இன்று கொண்டாடுகிறது. மகளிர் இடஒதுக்கீடு தற்போது தற்போது தெளிவில்லாத நிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது அமலாகும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்" என்றார்.

இதையும் படிக்க: Priyanka Gandhi: "பெரியாரின் அந்த கேள்வி இன்று வரை நீடிக்கிறது" - மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேச்சு

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
"மானியம் அல்லது சிறப்பு விலையில் டீசல் தேவை" - மத்திய பெட்ரோலியத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget