மேலும் அறிய

சிவகங்கை அருகே பேருந்து விபத்து: 11 பேர் பலி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன? அவசர உதவி எண் அறிவிப்பு !

விபத்து நடைபெற்ற இடத்திலும், மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையும் இணைந்து தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து: 11 பேர் பலி. அவசர தகவல் எண் அறிவிப்பு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

சிவகங்கையில் கொடூரமான விபத்து
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இன்று மாலை நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 35 பேர் காயமடைந்துள்ளனர், இப்படியாக துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததாக, ஆரம்ப கட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிகிச்சை பெறும் போது, மேலும் ஏழு பேர் உயிரிழந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 11 பேரில் நான்கு பெண்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் நான்கு பேரின் சடலங்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று பேரின் சடலங்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
 
விபத்துக்குள்ளானவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்
 
விபத்தில் பலத்த காயமடைந்த ஐந்து பேர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்றது. 108 அவசர சேவை ஆம்புலன்ஸ்கள் 10-க்கும் மேற்பட்டவை பயன்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் சென்று காயமடைந்தவர்களை பார்க்கவும், அவர்களிடம் ஆறுதல் கூறவும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து தகவல் பெற்றும் மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்.
 
சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆய்வு
 
சம்பவ இடத்திலும், மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையும் இணைந்து தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனைகளில் நேரில் பங்கேற்று நிலைமையை ஆராய்ந்தார். இதற்கிடையில், விபத்துக்கள் தொடர்பாக அவசர தகவல் பெறுவதற்காக 04575 246233 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்
 
விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் படு காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget