மேலும் அறிய

சிமெண்ட் விலை உயர்வதற்கான காரணம் என்ன?- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை உயர்ந்ததற்கான காரணம் தொடர்பாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை மடமடவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பாக தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாய் ஆக இருந்தது. அந்த விலை திடீரென அதிகரித்து தொடர்பாக கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இந்த விலை உயர்வு தொடர்பாக  தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிமெண்ட் தொழிற்சாலைகளும் தற்போது கடும் சவாலான சூழலை சந்தித்து வருகிறது. 35-40 சதவிகிதம் உற்பத்தியை மட்டுமே சிமெண்ட் தொழிற்சாலைகள் செய்து வருகின்றன. எங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை ஊரடங்கிற்கு முன்பாகவும் தற்போதும் நாங்கள் காத்து வருகிறோம்.

எனவே அவர்களை காப்பதற்காகவும் எங்களுடைய வாழ்வாதாரத்திற்காகவும்  தான் சிமெண்ட் விலையை அதிகரித்துள்ளோம். மேலும் சிமெண்ட் விலை என்பது கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களில் மிகவும் சிறியது. ஆகவே இதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் விலையை ஏற்றினோம். எனினும் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எங்கள் முடிவை மாற்றியுள்ளோம். அதாவது இந்த இக்கட்டான கொரோனா சூழலில் மக்களுக்கு உரிய மற்றும் நியாயமான விலையில் சிமெண்ட் கிடைக்க வழி வகை செய்யப்படும்.


சிமெண்ட் விலை உயர்வதற்கான காரணம் என்ன?- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்

அத்துடன் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்படும். மேலும் தமிழ்நாடு அரசு வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சிமெண்ட் விலை அதிகரிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அந்த நிறுவனங்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் தில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திரா ரூ.370, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40%க்கும் கூடுதலாக ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது" என குற்றச்சாட்டியிருந்தார். 

இந்தச் சூழலில் தற்போது தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கை அதை தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget