மேலும் அறிய

திருப்பூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை,6.00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 198 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.40 அடியாக இருந்தது.

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு.

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு  குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 198 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், வினாடிக்கு, 40 கன அடியில் இருந்து 25 கனஅடியாக காலை குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.40 அடியாக இருந்தது.

 


திருப்பூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

 

மாயனூர் கதவணை:

காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு, காலை, வினாடிக்கு, 879 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 876 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றல் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை:
         




திருப்பூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

 

க.பரமத்தி அருகே, ஆத்துப் பாளையம் அணைக்கு, காலை 6.00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.94 அடியாக இருந்தது.நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணை:

   


திருப்பூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

 

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட,நங்காஞ்சி  அணையின் நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது.நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அழிவின் பிடியில் அமராவதி ஆற்றுப் படுகை

கரூர் அமராவதி ஆற்றில் தொல்லியல் துறை சார்பில் ஒரு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அமராவதி ஆற்றுப்படுகையை சேதப்படுத்தினாலோ, அகற்றினாலோ, அழிவுக்கு உட்படுத்தினாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.  பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதி, அதில் இருந்து 200 மீட்டர் வரை சின்னத்தின் அருகில் அல்லது சின்னத்தை சுற்றியுள்ள பகுதி முறையே சுரங்கப் பணி மற்றும் கட்டுமானத்திற்கு முறைப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரூர் நகருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்களுக்கும் பண்டைய காலத்தில் வியாபாரம் நடந்திருப்பதை இந்த நாணயங்கள் உணர்த்துகின்றன. பெருமை வாய்ந்த பண்டைய நாகரீகம், வியாபாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமராவதி ஆறும், அதன் படுகையும் இருப்பதால் தொல்லியல் துறை, அமராவதி ஆற்றப்படுகையை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் இந்த பதாகையை வைத்துள்ளது.

ஆனால், இந்த போர்டு வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பெரிய சிமென்ட் குழாய் மூலமாக நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. கழிவு நீரோடு பாலித்தீன் உள்ளிட்ட குப்பையும் குவிந்து காணப்படுகிறது அமராவதி ஆற்று படுகை திறந்த வெளி பலிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த அழிவுகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொல்லியல் துறை மவுனம் காத்து வருகிறது. பழமையையும் கரூரின் பெருமையையும் பாதுகாக்க தொல்லியல் துறை அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை கரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget