மேலும் அறிய

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்

கடந்த 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஊழியருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ள கணபதி , தற்போது மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொறையார் என்ற ஊரின் ரேஷன் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் 28 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து அரசின் நியாய விலைக் கடைக்கு வேலைக்கு செல்லும் ஊழியர், தமிழக அரசின் ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் கடமையை செய்வதற்கு நெகிழ்ச்சிப் பயணம்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
மயிலாடுதுறை பெயர் பலகை

 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையே தன் வசப்படுத்தி மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் அன்றாட கடமையை செய்ய கூட தனி நபர் அச்சம் கொள்ளும் அளவிற்கு கொரோனாவின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய / மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்திய மக்கள் தொகையில் சராசரியாக 60 சதவீதம் பேர் வேலையை இழந்து, தொழில் முடக்கம் காரணமாக பொருளாதாரத்தை இழந்து வறுமையில் தவித்து வருகிறார்கள். அவர்கள் அத்துணை பேரும் அரசின் நலத்திட்டங்களையும் அரசின் நியாய விலைக் கடைகளையும் மட்டுமே நம்பி ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
சைக்கிளில் ரேஷன் கடைக்கு பணிக்கு செல்லும் கணபதி

 

இந்நிலையில், மக்கள் உயிரைக் காக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, ஊடகத்துறை என அனைத்து முன்களப் பணியாளர்களும் களத்தில் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். அதே நேரத்தில், மக்களுக்காக தன் வயதையும், கொரோனா வைரஸ் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தினம் 28 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து தன் வேலையை , வெறும் கடமை என்று பாராமல் மக்கள் சேவையாற்றி வருகிறார் கணபதி.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
ரேஷன் கடை பணியில் கணபதி

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. 58 வயதான இவர் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த ஊழியருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ள கணபதி , தற்போது மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொறையார் என்ற ஊரின் ரேஷன் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
கொரோனா நிவாரண டோக்கன் வழங்கும் கணபதி

 

 

58 வயதான கணபதிக்கு கண்ணில் பார்வை குறைபாடு இருக்கிறது. இருப்பினும், அவர் தினமும் தனது இரு மகள்களின் துணையுடன் பேருந்தில் பயணம் செய்து பொறையாறு சென்று ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள பொது ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரட்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகளுக்காக பொறையாறு செல்ல வேண்டிய நிலை கணபதிக்கு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்க வசதியில்லாத கணபதி, கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பொறையாறு சென்று வருகிறார். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பும் இவர் 28 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பத்து மணிக்கு கடையை சென்றடைகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கிளம்பி 9 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தடைகிறார். சராசரியாக நாளொன்றுக்கு 56 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

56 கிமீ பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் ரேஷன் ஊழியர் - சல்யூட்
சிறந்த அங்காடி விற்பனையாளருக்கான பாராட்டு கேடயம்

கடந்த ஆண்டு சீர்காழியில் பணியாற்றியபோது இதேபோல் தினமும் 40 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஓய்வுபெறும் வயதை நெருங்கிய இவர் சைக்கிளில் நீண்ட தூரம் பிரயாணம் செய்வது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் வலு இருந்தும், உழைக்க மறுக்கும் சிலருக்கு தள்ளாத வயதிலும் உழைத்து மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் கணபதியின் செயல் சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி.. காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி.. காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
Embed widget