மேலும் அறிய

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங்  - காரில் மோதும் சாகசத்தால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்

இளைஞர்களின் இச்செயல்களை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உருவாகுவதுடன், அச்சத்துடனேயே பயணிக்கும் சூழலும் எழுந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஓட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை பகுதியில் நீண்ட நெடுஞ்சாலை ஆக இருக்கும் தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் இன்னமும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் சிலர் நெடுஞ்சாலையில் வரும் கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் வீல் சாதகத்தில் ஈடுபட்டு வருகிறது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீலிங் எனப்படும் டூவீலர் சாகசத்தில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு, அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.

புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்வதுடன், புயலில் அழிந்துபோன துறைமுக நகரமான தனுஷ்கோடிக்கு சென்று அப்பதியில் இணையும் மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடல் பகுதிகளையும், புயலில் எஞ்சிய கட்டட இடிபாடுகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் வருட பிறப்பு ஆகியவற்றுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த ராமகாதை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் யாத்திரைகள் மேற்கொள்வோர், ராமேஸ்வரத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.

இவ்வாறு குவிந்துள்ள பக்தர்கள் தங்கள் வழிபாடு, பூஜைகளை முடித்துவிட்டு தனுஷ்கோடிக்கு சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் செல்கின்றனர். நீண்ட கடற்கரை மற்றும் சவுக்கு மர காடுகள் சாலையின் இருபுறமும் அமைந்திருக்க, ஆங்காங்கே உருவாகும் நகரும் மணற் குன்றுகளும், கடல் அலைகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு அளவில்லா ஆனந்தத்தை தருகிறது.

ஆனால் கடந்த சில நாள்களாக இந்த ஆனந்தத்திற்கு இடையூறு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர்கள் சிலர் வீலிங் எனப்படும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென உச்சிப்புளி பகுதியில் இருந்து வரும் சிலர், உள்ளூர் இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்களின் இச்செயல்களை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உருவாகுவதுடன், அச்சத்துடனேயே பயணிக்கும் சூழலும் எழுந்துள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில், பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget