மேலும் அறிய

”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே முடிதிருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் பல வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசால் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 2 ஆயிரம் மூலம் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மோசம். அவர்களின் மருத்துவ செலவுகளும், வாழ்வாதாரத் தேவைகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோனாருக்கு கிடைக்காது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரு தவணைகளில் தலா ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-covid-19-lockdown-chennai-coimbatore-district-grocery-shops-4571Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, கொரோனா காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூபாய் ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த வந்த  முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த வந்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Today Rasipalan March 29: சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த வந்த  முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த வந்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Today Rasipalan March 29: சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
Embed widget