மேலும் அறிய

”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே முடிதிருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் பல வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசால் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 2 ஆயிரம் மூலம் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மோசம். அவர்களின் மருத்துவ செலவுகளும், வாழ்வாதாரத் தேவைகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோனாருக்கு கிடைக்காது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரு தவணைகளில் தலா ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-covid-19-lockdown-chennai-coimbatore-district-grocery-shops-4571Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, கொரோனா காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூபாய் ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget