மேலும் அறிய

”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே முடிதிருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் பல வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசால் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 2 ஆயிரம் மூலம் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மோசம். அவர்களின் மருத்துவ செலவுகளும், வாழ்வாதாரத் தேவைகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோனாருக்கு கிடைக்காது.


”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரு தவணைகளில் தலா ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-covid-19-lockdown-chennai-coimbatore-district-grocery-shops-4571Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, கொரோனா காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூபாய் ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget