மேலும் அறிய

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு

Background

கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309  பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 17வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 91.25 சதவீதமாக  உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 28, 864 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.    

20:16 PM (IST)  •  31 May 2021

தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

18:44 PM (IST)  •  31 May 2021

ஊரடங்கு நிவாரணத்தின் முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம்  அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் தங்களது முதல் தவணையை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

17:30 PM (IST)  •  31 May 2021

தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி செலுத்தப்படாது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது.  ஜூன் மாதத்திற்கான முதல் தவணை தடுப்பூசி வரும் 6-ந் தேதி தான் வரும் என்பதால், ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.

16:56 PM (IST)  •  31 May 2021

உத்தரகாண்டில் ஜூன் 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7-ந் தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைககள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் நோட்டு மற்றும் புத்தக கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளளது.  

16:07 PM (IST)  •  31 May 2021

தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக கூறினார்.  

15:11 PM (IST)  •  31 May 2021

எச்.எல். எல். தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து விரைவில் முடிவு - மத்திய அமைச்சர் தகவல்

வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். ஆலையில் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இததொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று ரவிக்குமார் எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

13:29 PM (IST)  •  31 May 2021

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை முதல்வர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். 

13:26 PM (IST)  •  31 May 2021

இறந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் விதிக்கும் முறையை திருத்த வேண்டும்.

இறந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் விதிக்கும் முறையை முதல்வர் தலையிட்டு திருத்த வேண்டும் என்று வெங்கடேசன்.எம்.பி வலியுறுத்தினார்.  

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்குகிறது. இறந்தவர்களைப் பதிய வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள். அபராதத் தொகையை விட கொடியது மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல்.

மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கி. கிடக்கிறார்கள். இறப்புச் சான்றிதழுக்காக அழுத கண்ணீரோடு அலையவிட வேண்டாம். எளிய மக்களின் இடரைக் குறைக்க இது மேலும் உதவும்' என்று தெரிவித்தார்.  

12:47 PM (IST)  •  31 May 2021

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருதுவமனைகள் மீது நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.     

12:40 PM (IST)  •  31 May 2021

கடந்த 50 நாட்களில் இல்லாத ஒருநாள் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த 50 நாட்களில் இல்லாத ஒருநாள் குறைந்தபட்ச பாதிப்பாகும்.        

Image

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs LSG Match Highlights: ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ்..சென்னையை வச்சு செய்த லக்னோ..அபார வெற்றி!
CSK vs LSG Match Highlights: ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ்..சென்னையை வச்சு செய்த லக்னோ..அபார வெற்றி!
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

EPS on PM Modi : இது தான் பாஜக எதிர்ப்பா? மயில் இறகால் வருடிய EPS? அதிமுக அறிக்கையால் சர்ச்சை!Jayakumar pressmeet  : ”ஒரு PHOTO காமிங்க... 1 கோடி தரேன்” சவால்விட்ட ஜெயக்குமார்Jagan Mohan Reddy Net Worth : பணக்கார முதலமைச்சர்..எகிறும் ஜெகன் மோகன் GRAPH! இத்தனை கோடியா?Jayakumar Pressmeet  : ”என் பேரனுக்கே VOTE இல்ல! சொதப்பிய தேர்தல் ஆணையம்” கொந்தளித்த ஜெயக்குமார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs LSG Match Highlights: ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ்..சென்னையை வச்சு செய்த லக்னோ..அபார வெற்றி!
CSK vs LSG Match Highlights: ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ்..சென்னையை வச்சு செய்த லக்னோ..அபார வெற்றி!
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Embed widget