Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 17வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 91.25 சதவீதமாக உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 28, 864 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு நிவாரணத்தின் முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் தங்களது முதல் தவணையை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.






















