19 மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் – இரவு 7 மணிவரைக்கும் மழை இருக்கு!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















