மேலும் அறிய

அமைச்சர் சேகர்பாபுவுக்கு சபாநாயகர் கண்டனம் - காரணம் என்ன?

தமிழகத்தில் டாஸ்மாக் உள்ளது. கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுபோன்ற உயிரிழப்புகள் புதுச்சேரியில் ஏற்பட்டதில்லை.

புதுச்சேரி: தமிழகத்தில் தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்கிறது புதுச்சேரி அரசு சார்பில் தமிழக அமைச்சர் சேகர் பாபுவை வன்மையாக கண்டிக்கின்றோம் என சபாநயாகர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாததிற்கு எதிரான இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை போற்றும் வகையில் புதுச்சேரி மணவெளி தொகுதி சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை வரை நடைபெற்ற பேரணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசியக்கொடி கையில் ஏந்தி சென்றனர்.

பின்னர் சபாநாயகர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளை கொண்டு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி வெற்றி கொடி நாட்டியுள்ளார். இதற்காக அந்த பெண் அதிகாரிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி பேரணி நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது இருந்த பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தெரிவித்துள்ளேன். அவர் அதற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோல் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, நானும் பொதுப்பணித்துறை அமைச்சரும் சந்தித்து கூடுதல் நிதிக்கான அனுமதி கேட்டு முதல்வர் கொடுத்த கடிதத்தை அளித்துள்ளோம். விரைவில் நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து கூடுதல் நிதி ரூ.4 ஆயிரம் கோடி கிடைப்பதற்கு ஆவணம் செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மேம்பால பணிக்கும், மானிய நிதியாக ரூ.200 கோடியும், காலாண்டு நிதி ரூ.750 கோடி உள்ளிட்ட நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. புதிய சட்டப்பேரவைக்கான கோப்பு இன்று செல்கிறது. இதுபோல் என்னென்ன நாம் கேட்டோமோ அனைத்தையும் மத்திய அரசு சிறந்த முறையில் நமக்கு வழங்கி வருகிறது. புதுச்சேரி ரயில் நிலையம் மேம்படுத்த ரூ. 90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

தமிழகத்தில் தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்கிறது

அப்போது, புதுச்சேரி பற்றி தமிழக அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்., அதற்கு சட்டப்பேரவைத் தலைவர், மதுவால் புதுச்சேரி தள்ளாடவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் உள்ளது. கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுபோன்ற உயிரிழப்புகள் புதுச்சேரியில் ஏற்பட்டதில்லை. பிரெஞ்சு நாட்டின் கலாச்சாரம் இங்குள்ள காரணத்தால் மது உள்ளிட்டவை இங்கு கிடைக்கிறது. இதனால் தான் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில மக்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களை நாம் யாரும் வாருங்கள் என்று அழைக்கவில்லை.

அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். நல்ல மதுவை பருகிவிட்டு செல்கின்றனர். இதில் எங்கு புதுச்சேரி தள்ளாடுகிறது. தமிழகத்தில் தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்கிறது. எனவே புதுச்சேரி அரசு சார்பில் தமிழக அமைச்சர் சேகர் பாபுவை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget