புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்வெளியிட்டுள்ளது!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2026–27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வர உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின்படி மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2026–27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
மாணவர்களுக்கு நிம்மதி தரும் முக்கிய சலுகைகள்:
புதிய கொள்கை அமலாக்கப்பட்டாலும், தற்போது படித்து வரும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ சில முக்கிய சலுகைகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது:
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு: தற்போது 10-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், அடுத்த கல்வி நிலைக்கு (அடுத்த வகுப்புகளுக்கு) உயரும் போது, இந்த மூன்றாவது மொழிக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இருக்காது.
வெளிநாட்டு மொழி படிப்போருக்குப் புதிய விதி: தற்போது பள்ளிகளில் இரண்டு வெளிநாட்டு மொழிகளைக் கற்று வரும் மாணவர்கள், அதனைத் தொடர்ந்து கற்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் அதனுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழி அல்லது தங்களது தாய்மொழியைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கற்றல் வளங்கள் மற்றும் சிபிஎஸ்இ-யின் விளக்கம்:
மாணவர்களின் வயது மற்றும் அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ப, தேவையான கற்றல் வளங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் (Study Materials) அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. இந்த மொழிக் கற்றல் முறை, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயனுள்ளதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், அறிவை வளர்க்கும் அனுபவமாகவும் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுவது என்ன?
தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் மிக முக்கியமாக, குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயப் பரிந்துரையாகும். இதன் மூலம் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஆழமாக அறிந்துகொள்ளவும், அவர்களின் மொழித்திறன் மேம்படவும் வழிவகை ஏற்படும் என கல்வி வாரியம் கூறியுள்ளது.
மேலும், நடுநிலைப் பள்ளிகளில் (6 முதல் 8-ஆம் வகுப்பு வரை) கற்ற மொழியின் தொடர்ச்சியாகவே, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் இந்த மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் மனவளர்ச்சியில் சமநிலையைப் பேணும் வகையிலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் களம் மற்றும் சமூக அமைப்புகளின் எதிர்ப்பு:
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வரப் பல்வேறு சமூக அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் தீவிரமான அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புச் சூழலுக்கு மத்தியிலும், நடப்பு கல்வியாண்டு முதல் இக்கொள்கை நடைமுறைக்கு வருவது புதுச்சேரி கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















