Anbumani Ramadoss; மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு பணி ஆணை வழங்கவேண்டும்; எம்.பி.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு பணி ஆணையையும் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு பணி ஆணையையும் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வும், பிற படிகள் உயர்வும் வழங்கப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் இரு பிரிவினரை பாகுபாட்டுடன் நடத்துவது நியாயமல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய தேதிகளில் தலா 15% வீதம் மொத்தம் 30% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் படி ரூ.1500-லிருந்து 100% உயர்த்தி ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது!(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 19, 2022
ஆனால், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வும், பிற படிகள் உயர்வும் வழங்கப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் இரு பிரிவினரை பாகுபாட்டுடன் நடத்துவது நியாயமல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி ஆணையும், ஊதிய உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!(4/4)@CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 19, 2022
பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி ஆணையும், ஊதிய உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க,
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம்: இதுவரை கொண்டுவராதது ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையீடு தேவை - ராமதாஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

