மேலும் அறிய

மேலும் முடக்கும் ஊரடங்கு.. மாற்றுத்திறனாளியை வீட்டை காலிசெய்யச் சொன்ன உரிமையாளர்..

எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் மங்களசுந்தரிக்கு ஏதாவது ஒரு அரசுவேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலைதான் எண்ணிலடங்கா சோகத்தை எழுப்பியுள்ளது.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தர்மகோவில் தெருவைச் சேர்ந்தவர் மங்களசுந்தரி, 30 வயது. இவருடைய கணவர் பூமாலை இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு ஹரிணி என்கிற எட்டு வயதுப் பெண் குழந்தை உள்ளார் இந்நிலையில் மங்கள சுந்தரி தனது தாய் லதாவுடன் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் இந்நிலையில் மங்களசுந்தரியின் தாயார் லதா வீட்டு வேலைக்கு சென்றுவந்து, அவர் கொண்டு வரும் சிறிய வருமானத்தை நம்பியே இந்த 4 பேரும் இவ்வளவு ஆண்டுகாலமாக குடும்பத்தை நடத்தி வந்தனர் தற்போது இவர்களுடைய வாழ்க்கையை இந்த ஊரடங்கு முற்றிலும் முடமாக்கியுள்ளது

கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக வீட்டு வேலைக்கு வரவேண்டாம் என லதாவை அவர் வேலைசெய்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துவிட்ட காரணத்தினால் அன்றாட உணவுத்தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மிகுந்த கஷ்டத்துடன் நாள்தோறும் வாழ்க்கையை நடத்தி வருவதாக கண்ணீர் மல்க மங்களசுந்தரி தெரிவிக்கிறார். மேலும் கடந்த மூன்று மாத காலமாக தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்தாத காரணத்தினால் வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர்.  இனி எங்கு செல்வது என்று தெரியாமல் மிகுந்த மன வேதனையுடன் மங்களசுந்தரி குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். தன்னுடைய குழந்தை  பசியால் துடிப்பதை கண்டு  மனவேதனையுடன்  காணப்படுகிறார் மங்களசுந்தரி. மேலும் தன்னுடைய தாய் மங்கலசுந்தரி அருகில் எங்கும் செல்ல வேண்டுமென்றால் 8 வயது சிறுமி ஹரிணி மூன்று சக்கர வாகனத்தில் தனது தாயை வைத்து தள்ளும் சம்பவம் பார்க்கும் அனைவரும் கண்களையும் கலங்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்

அரசு ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு நபர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் நிலையில் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் மங்களசுந்தரிக்கு  ஏதாவது ஒரு அரசுவேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சுற்றத்தாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget