பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர
— Arputham Ammal (@ArputhamAmmal) May 18, 2021
மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்கவேண்டும் என்னும் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.





















