மேலும் அறிய

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மணி உயிரிழந்துள்ளார். நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று வேட்பாளர் மணி இறந்துள்ளார்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்தத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் ஆணையர் பழனிகுமார், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். அதேபோல மீதமுள்ள மாவட்டங்களில் காலியாக இருக்கும் 789 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலும் 9-ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அதன்படி, மொத்தம் 27,791 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவு, வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னம் ஒதுக்குதல், பிரசாரம் என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடுபிடித்து வந்தது. ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றன. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற இருக்கும் தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை, வாக்குச்சாவடி அலுவலர்களின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான 13 வகையான பொருள்களைச் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களும் தமது கட்சி தொண்டர்கள் மற்றும் பூத் அசிஸ்டண்ட்களுடன் சேர்ந்து வாக்குச்சாவடிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்ற நிலையில் பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் உயிரிழந்ததாக செய்திகள் வந்துள்ளன.

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணி என்னும் அறுபது வயதுடயவர் இறந்துள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்று இறந்ததால் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளூர் தொகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

மேலும் இன்றைய முக்கிய செய்திகளுக்கு...

 

 

தலைப்பு செய்திகள்

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget