மேலும் அறிய

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மணி உயிரிழந்துள்ளார். நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று வேட்பாளர் மணி இறந்துள்ளார்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்தத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் ஆணையர் பழனிகுமார், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். அதேபோல மீதமுள்ள மாவட்டங்களில் காலியாக இருக்கும் 789 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலும் 9-ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அதன்படி, மொத்தம் 27,791 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவு, வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னம் ஒதுக்குதல், பிரசாரம் என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடுபிடித்து வந்தது. ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றன. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற இருக்கும் தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை, வாக்குச்சாவடி அலுவலர்களின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான 13 வகையான பொருள்களைச் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களும் தமது கட்சி தொண்டர்கள் மற்றும் பூத் அசிஸ்டண்ட்களுடன் சேர்ந்து வாக்குச்சாவடிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்ற நிலையில் பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் உயிரிழந்ததாக செய்திகள் வந்துள்ளன.

ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் உயிரிழப்பு: அரக்கோணம் அருகே சோகம்!

அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணி என்னும் அறுபது வயதுடயவர் இறந்துள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்று இறந்ததால் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளூர் தொகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

மேலும் இன்றைய முக்கிய செய்திகளுக்கு...

 

 

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget