மேலும் அறிய

Crime: திருப்பூர்: குடித்ததை தட்டி கேட்டது குத்தமா? 4 பேரை கொலை செய்த கும்பல் - ஒருவர் அதிரடி கைது..

திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் 4 கொடூரக் கொலைகள், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு  கிராமத்தில் உள்ள குறைகிணறு பகுதியில் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறைகிணறு பகுதியைச் சேர்ந்த  விவசாயி செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களான மோகன்ராஜ்,  புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் ஆவர்.  செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது நண்பர்களுடன் நேற்று இரவு குறைதோட்டம் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட செந்தில்குமாரை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலை நிகழ்ந்த இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி. செளமியா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், செந்தில்குமாரிடம் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன், மோகன்ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.  சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்திய அதேநேரம், மோகன்ராஜும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், நண்பர்களுடன் அங்கு சென்று திட்டமிட்டு செந்தில்குமாரையும் மோகன்ராஜையைும் தடுக்க வந்த 2 பெண்களையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைகள் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பா.ஜ.கவினர் குவிந்தனர். கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி தலைமையில் 5 எஸ்.பிக்கள்,10 டி.எஸ்.பிக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறை சேர்ந்த செல்லமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

EPS: நாளுக்கு நாள் சீர்குலையும் சட்டம் - ஒழுங்கு: பல்லடம் படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Pirona - Corona Virus: வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. தடுப்பூசி போட்டாலும் பாதிக்கும் தன்மையுடையது.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget