மேலும் அறிய

Crime: திருப்பூர்: குடித்ததை தட்டி கேட்டது குத்தமா? 4 பேரை கொலை செய்த கும்பல் - ஒருவர் அதிரடி கைது..

திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் 4 கொடூரக் கொலைகள், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு  கிராமத்தில் உள்ள குறைகிணறு பகுதியில் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறைகிணறு பகுதியைச் சேர்ந்த  விவசாயி செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களான மோகன்ராஜ்,  புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் ஆவர்.  செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது நண்பர்களுடன் நேற்று இரவு குறைதோட்டம் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட செந்தில்குமாரை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலை நிகழ்ந்த இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி. செளமியா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், செந்தில்குமாரிடம் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன், மோகன்ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.  சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்திய அதேநேரம், மோகன்ராஜும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், நண்பர்களுடன் அங்கு சென்று திட்டமிட்டு செந்தில்குமாரையும் மோகன்ராஜையைும் தடுக்க வந்த 2 பெண்களையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைகள் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பா.ஜ.கவினர் குவிந்தனர். கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி தலைமையில் 5 எஸ்.பிக்கள்,10 டி.எஸ்.பிக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறை சேர்ந்த செல்லமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

EPS: நாளுக்கு நாள் சீர்குலையும் சட்டம் - ஒழுங்கு: பல்லடம் படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Pirona - Corona Virus: வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. தடுப்பூசி போட்டாலும் பாதிக்கும் தன்மையுடையது.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget