மேலும் அறிய

Thamimun Ansari:“மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி தலைமையில்தான் இயங்குகிறது” - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி அதன் பொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி தலைமையில் தான் இயங்குவதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

மனிதநேய ஜனநாயக கட்சி அதன் பொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி தலைமையில் தான் இயங்குவதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்த தமிமுன் அன்சாரி, அக்கட்சியில் இருந்து வெளியேறி மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வரும் அவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு எம்.எல்,ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதற்கிடையில் சமீப காலமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஹாரூனுக்கும், பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் ஹாரூன் ரசித், அவைத்தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதற்கிடையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் திண்டுக்கலில் வைத்து ஆலோசனை நடத்தி தமிமுன்  அன்சாரி கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திருச்சியில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு மற்றும்  தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிமுன் அன்சாரி தலைமையிலேயே கட்சி தொடர்ந்து செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்படுள்ளது. 

அதில், ”மனிதநேய ஜனநாயக கட்சியில் கோஷ்டிகளை உருவாக்கும் நோக்குடனும், கட்சியை பிளவுபடுத்தும் வகையிலும், கட்சியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறிடும் வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் கடந்த 07.02.2023 அன்று கட்சியில் பொருளாளராக செயல்பட்டு வந்த ஹாருன் ரசீத், அவைத் தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி, ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு 40 மாவட்டங்கள் எழுத்துப்பூர்வ பரிந்துரை செய்துள்ளனர். 

கட்சியின் பைலா (அமைப்பு விதி) விதி எண் 48 உட்பிரிவு 4-ன் படி, கட்சியிலிருந்து நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எவரும் கட்சியின் பெயரையோ, கொடியையோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. நேற்று முன்தினம் திண்டுக்கலில் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேனரை அவர்கள் பயன்படுத்தியதை அறிந்து, அதை காவல்துறை அகற்றி இருக்கிறது. 

அப்படி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை நீக்கியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்கள்.  அதை வன்மையாக இந்த சிறப்பு நிர்வாக குழு கண்டிக்கிறது.  கட்சியில் நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதிலிருந்து 145 பேரை மட்டுமே திரட்டி அறிவித்திருக்கும் இந்த உண்மைக்கு மாறான தகவலை எவரும் நம்ப வேண்டாம் என்றும், கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் ஒற்றுமையோடு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Embed widget